வியாழக்கிழமை, ஜூன் 25
Shadow

Author: Kodanki

சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்

சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் நாளிதழ் ஒன்றில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரையில், அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்தார். இதற்கு பா.ஜ.க தலைவர் எச் ராஜா வைரமுத்துவை தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்து எதிர்வினையாற்றியிருந்தார். மேலும், அவருக்கு பல்வேறு இந்துத்துவ இயக்கங்களும் கண்டனங்களும், மிரட்டல்களும் விடுத்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- “தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க "தினமணி" நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் எவ்வ...
ஜெயலலிதா மரணம்… விசாரணை ஆணைய கெடு: 2 பெட்டிகளில் வந்த அப்பல்லோ ஆவணங்கள்..!

ஜெயலலிதா மரணம்… விசாரணை ஆணைய கெடு: 2 பெட்டிகளில் வந்த அப்பல்லோ ஆவணங்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதா மரணம்... விசாரணை ஆணைய கெடு: 2 பெட்டிகளில் வந்த அப்பல்லோ ஆவணங்கள்..! ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களை போக்கி உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பியவர்கள், புகாருக்கு உள்ளானவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்கள் என அனைத்து தரப்பினரிடமும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்து வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறார். அவ்வகையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டு என சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அப்பல்லோ மருத்துவமனை இதனை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதை...
‘உத்தமி’ ஆன பிக்பாஸ் ஜூலி..!

‘உத்தமி’ ஆன பிக்பாஸ் ஜூலி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘உத்தமி’ ஆன பிக்பாஸ் ஜூலி..! ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார் ஜூலி. இந்நிலையில் இவர், தற்போது 'கே7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘உத்தமி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சமூக சேவகராக நடிக்கிறார் ஜூலி....
மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி

மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி ‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநராக சுந்தர்.சி கைவசம் ‘சங்கமித்ரா’ மற்றும் ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘கலகலப்பு 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சுந்தர்.சி “அடுத்ததாக ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். வரலாறு மற்றும் சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ‘தோனி’ பட புகழ் தீஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்...
அமெரிக்கா ‘கிரீன் கார்டு’ ஒதுக்கீடு அதிபர்  டிரம்ப் புது முடிவு..!

அமெரிக்கா ‘கிரீன் கார்டு’ ஒதுக்கீடு அதிபர் டிரம்ப் புது முடிவு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படுவது கிரீன் கார்டு. இந்த கிரீன் கார்டு பெறுவதற்கு உலகமெங்கும் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறையினர், டாக்டர்கள், வக்கீல்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் தகுதியின் அடிப்படையில் குடியேற்ற உரிமை வழங்கவும், வருடாந்திர கிரீன் கார்டு ஒதுக்கீட்டை 45 சதவீத அளவுக்கு அதிகரிக்கவும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சபையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி ஜனாதிபதி டிரம்பால் கையெழுத்திடப்பட்டு சட்டமாகி விட்டால், அது பன்முக விசா திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்; குடியேற்ற அளவை தற்போதைய 10 லட்சத்து 5 ஆயிரம் என்பது ஆண்டுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவுக்கு குறைக்கும். அமெரிக்காவின் எதிர்காலத்தை பாதுகாக்கும் சட்ட மசோதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, தற்போது ஆண்ட...
விமானத்தை போல் குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்

விமானத்தை போல் குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விமானத்தை போன்று குளுகுளு சொகுசு ரெயில் பெட்டி அறிமுகம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரெயில் பெட்டியில் விமானத்தில் பயணிப்பது போல சொகுசான பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம். வசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்கு பெரும்பாலானோர் ரெயில் பயணங்களை தேர்வு செய்கிறார்கள். இந்த வகையில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பொது வகுப்பு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என பல பிரிவுகளில் ரெயில்வே நிர்வாகம் பெட்டிகளை நிர்ணயித்துள்ளது. இதில் முதல் வகுப்பு பெட்டிகள் அதிக சொகுசு வசதிகள் உடையதாக இருக்கும். முதல் வகுப்பில் பயணிகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். ரெயில் நிலையங்களில் முதல் வகுப்பு பயணிகளுக்கு தனியாக இருக்கை வசதிகள் இருக்கும். இந்த நிலையில் முதல் வகுப்பை விட கூடுதல் வசதிகள் கொண்ட அனுபூதி பெட்டியை ...
ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் – பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் – பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் - பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி இந்துக்களின் தாயாராக கருதப்படும் ஆண்டாள் குறித்து கவிப்பேரரசு ஒரு கருத்தை பேசியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வைரமுத்துவின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ராஜா ஒருபடி மேலே போய் வைரமுத்துவையும் அவரது தாயாரையும் அவதூறாக பேச இப்போது வைரமுத்துவுக்கு ஆதரவாக பல குரல்கள் எழும்பியது. இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகர் இது குறித்து வெளியிட்ட கருத்து: தங்கள் அலுவலகத்தில் பல இந்துக்கடவுள்களின் படங்களை வைத்திருக்கும் திரு பாரதி ராசா அவர்களே தன் ரத்தம் அவமானப்படுவதை தட்டிக்கேட்பதை விட,வியாபாரத்துக்காக மீண்டும் சேர்ந்த நட்புக்கு குரல் கொடுக்க பாய்ந்து வரும் (என்)உயிர்த்தோழன். தவறு செய்தவரே மேலோட்டமாக மன்னிப்பு கேட்டபின் உங்களின்...
ஆஜராக வேண்டும்… நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு

ஆஜராக வேண்டும்… நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஆஜராக வேண்டும்... நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு நடிகை அமலா பால் இந்த வரியை தவிர்ப்பதற்காக, புதுச்சேரியில் வசிப்பதுபோல் போலி ஆவணங்களை கொடுத்து, புதுச்சேரியில் தனது சொகுசு காரை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, வரி ஏய்ப்பு செய்ததாக அமலா பால் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக, முன்ஜாமீன் கோரி, கேரள ஐகோர்ட்டில் அமலா பால் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதி ராஜா விஜயராகவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு, வருகிற 15–ந் தேதி அமலா பால் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்....
படைப்பாளி வைரமுத்துவை  தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை – H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை

படைப்பாளி வைரமுத்துவை தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை – H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு எவ்வளவோ நாட்களாகிவிட்டது. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லமல் போய்விட்டது. மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டை காப்பியங்கள் என்றால், கவிப்பேரரசு எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசங்கள், கருவாச்சிக்காவியமும் எளிய மனிதர்களின் காப்பியமில்லையா. அந்த அளவில் தமிழை எளிமை படுத்திய கவிஞனை இழி சொற்களால் எப்படி பேசலாம். வைரமுத்து தனி மனிதனல்ல. தமிழினத்தின் பெரு அடையாளம். ஒரு படைப்பாளன் தன் கருத்துக்களை சொல்லலாம். அல்லது மேற்கோள் காட்டலாம் அதை அட்சர சுத்தமாக தவறென தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை என இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் ‘எவனுக்கும்’ அதிகாரமில்லை என பாஜகவைச் சேர்ந்த தேசிய செயலாளர்  H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சமீபத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து ஒரு புத...