ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28
Shadow

Author: Kodanki

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா- படம் முக்கிய கட்டத்தை எட்டியது!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா- படம் முக்கிய கட்டத்தை எட்டியது!

CINI NEWS, திரைப்படங்கள்
சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஆரா சினிமாஸ், `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நிறைவு பெற்றுள்ளது. `ராஜதந்திரம்' புகழ் வீரா மற்றும் `குக்கூ' புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். புதுமுகம் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில், எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில், மாட்லி ப்ளூஸ் இசையில் `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' உருவாகி வருகிறது. நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ''ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில், கொடுத்த பட்ஜெட...
கேரளாவின் மாநிலப் பழமாக பலாப்பழம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!

கேரளாவின் மாநிலப் பழமாக பலாப்பழம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரளாவின் மாநிலப் பழமாக பலாப்பழம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில வேளாண் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் நேற்று (மார்ச் 17) அறிவித்துள்ளார். கேரளாவின் மாநில விலங்கு யானை, பறவை கிரேட் கார்ன்பில், மலர் கன்னிகோனா, மரம் தென்னை, மீன் கரிமீன் எனக் கேரள மாநிலம் அறிவித்துள்ளது. ஆனால், பழம் என்று ஒன்று இது வரை அறிவிக்கப்படவில்லை. வரும் 21ஆம் தேதி, முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை கேரள மாநிலப் பழமாக அங்கீகரித்து முறைப்படி அரசாணையை அம்மாநில அரசு வெளியிடுகிறது. மாநில வேளாண் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் , “கேரளாவில் லட்சக்கணக்கான பலா மரங்களும், பல்வேறு வகையான பலாப் பழங்களும் விளைகின்றன. அதன்மூலம் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்வது மூலம் கேரளாவுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. எனவே, பலாப்பழத்துக்கு மாநிலத்தின் அங்கீகாரத்தை வழங்கி, அதனுடைய உற்பத்தியையும், மதிப்புக்கூட்டு பொருள்களி...
காவிரி விவகாரம்: டி.டி.வி.தினகரன் உண்ணாவிரதம் அறிவிப்பு!

காவிரி விவகாரம்: டி.டி.வி.தினகரன் உண்ணாவிரதம் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமெனக் கடந்த மாதம் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்துடன் நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில், இதுகுறித்து எவ்வித அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இதற்காகத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தினமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகத் தமிழக எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேற்று (மார்ச் 17) அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உச்ச நீத...
தினகரன் அணியிலிருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்!

தினகரன் அணியிலிருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்!

HOME SLIDER, NEWS
 டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத், அரசியலிலில் இருந்து விலகுவதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுக-வில் தினகரன் ஓரங்கட்டப்பட்டு அணிகள் இணைப்புக்கு பின்னர், மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்தி தினகரனுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்தவர் நாஞ்சில் சம்பத். இவ்வாறு தினகரனுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்த நாஞ்சில் சம்பத், மதுரை மேலூரில் கடந்த 15-ம் தேதியன்று 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை அறிவித்த போது, அந்த விழாவில் பங்கேற்கவில்லை. புதிய அமைப்பின் தொடக்க விழாவில் நாஞ்சில் சம்பத் தென்படாமல் இருந்தது பெரிதும் பேசப்பட்டது. ஆனால், குரங்கணி தீ விபத்தில் அவருடைய உறவினர் இறந்து விட்டதால் அவர் வரவில்லை என வெளியில் கூறப்பட்டது. எனினும், அவருக்கும் தினகரனுக்கு கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு இருந்து வந்துள்ளத...
மறைந்த நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்! – வரி கட்டாததால் ஐ. டி. ஆக்‌ஷன்!

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்! – வரி கட்டாததால் ஐ. டி. ஆக்‌ஷன்!

NEWS, செய்திகள்
வரி ஏய்ப்பு செய்ததால் வருமானத் துறையினர் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வீட்டை ஏலத்தில் விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்தவர் ஸ்ரீவித்யா. 80களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் பல்வேறு குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வசித்துவந்த இவர், 2006ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார். இவரின் இறப்புக்குப் பிறகு, இவரது அபிராமபுர வீட்டை அவரின் சகோதரர் கே.பி.கணேஷ்குமார் என்பவர் நிர்வகித்துவந்தார். அந்த வீடு தற்போது மாதம் 13,000 ரூபாய்க்கு வழக்கறிஞர் உமாசங்கர் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இந்த வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ. 45,28,000 வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டு ய்பாடிக்கப்பட்...
சர்வதேச அளவில் நடக்கும் உணவுத் திருவிழாக்கள்!- மினி ஸ்பெஷல் ரிப்போர்ட்!

சர்வதேச அளவில் நடக்கும் உணவுத் திருவிழாக்கள்!- மினி ஸ்பெஷல் ரிப்போர்ட்!

HOME SLIDER, செய்திகள்
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பலநூறு உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. உலகின் புகழ் பெற்ற உணவுகளான பீட்சா, சாக்லெட்டில் தொடங்கி அந்தந்த பகுதிகளின் பாரம்பரிய உணவுகள் வரை அனைத்தையும் இத்திருவிழாக்களில் சுவைக்க முடியும். ஒவ்வொரு இடத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப நடத்தப்படும் இத்தகைய உணவுத் திருவிழாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். அப்படி நடைபெறும் பல உணவுத் திருவிழாக்களில் சிறந்தவை சிலவற்றைப் பற்றி சிறிய தொகுப்பு இதோ உங்களுக்காக! மூன் திருவிழா சீனாவில் புத்தாண்டிற்கு அடுத்ததாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது மூன் திருவிழா. பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் இது சந்திரனுக்கு நன்றி சொல்லும் விதத்திலும், அறுவடையைக் கொண்டாடும் வகையிலும் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவின் லூனார் காலண்டரின்படி எட்டாவது மாதத்தில் 15ஆம் நாள் மக்கள் அனைவரும் ஒன்றுகூட...
சென்னை பல்கலைகழகத்தில் எம்.ஜி.ஆர். இருக்கை-க்காக 25 லட்சம் நிதி அளித்த சைதை துரைசாமி!

சென்னை பல்கலைகழகத்தில் எம்.ஜி.ஆர். இருக்கை-க்காக 25 லட்சம் நிதி அளித்த சைதை துரைசாமி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை பல்கலைக்கழகத்தில், இதுவரை பல பெரிய தலைவர்கள் பெயரில் ஆய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த தலைவர்கள் பற்றி மாணவர்கள் ஆய்வு செய்ய வசதியாக இருக்கிறது. தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. ஆனால், அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனபிறகும், அவர் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள முடியவில்லை என சைதை துரைசாமியின் மனித நேய மையத்தின் வழியாக ‘சிவில் சர்வீஸ்’ தேர்வு எழுதும் மாணவர்கள் மூலம் அவருக்கு தெரிய வந்தது. இதற்கு காரணம் அவர் பெயரில் ஆய்வு இருக்கை இல்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சைதை துரைசாமி உடனடியாக சென்னை பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.25 லட்சத்தை அவர் தலைமையில் இயங்கி வரும் மனிதநேய மையத்தின் சார்பில் வழங்கினார். இதற்கான ஒப்புதல் சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ‘சிண்டிகேட்’...
‘உத்தரவு மகாராஜா’ படப்பிடிப்பு அமர்களமாக நிறைவு!

‘உத்தரவு மகாராஜா’ படப்பிடிப்பு அமர்களமாக நிறைவு!

CINI NEWS, திரைப்படங்கள்
உதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் இறுதிகட்ட கிராபிக்ஸ்க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீரர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக  நிறைவுற்றது.கிராபிக்ஸ் பணிகள் இந்தப் படத்திற்கு முக்கியமானது வெளிநாட்டில் இருந்து பல  தொழில் நுட்ப வல்லுனர்கள் இதற்காகவே வரவழைக்கப்பட்டுள்ளனர்.  மற்றும் ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் கிராபிகிஸ்  மற்றும் சவுண்ட் எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை அடித்து அந்த காட்சியில் நடித்தார். இத்திரைப்படத்தில் இது உதயாவின் ஐந்தாவது  கெட்-அப் ஆகும். இளைய திலகம் பிரபு மிக முக்கியமான மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவை சரளா, M.S.பாஸ்கர், குட்டி பத்மின...
அழிந்து வரும் கிராமத்து  வாழ்வியலை சொல்ல வரும் ‘உளிரி’ திரைப்படம்..!

அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்ல வரும் ‘உளிரி’ திரைப்படம்..!

CINI NEWS, திரைப்படங்கள்
ஸ்ரீலட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘உளிரி.’ இந்தப் படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சயனி நடித்துள்ளார். மற்றும்  பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோரும் நடித்துள்ளனர்.      ஒளிப்பதிவு – வெங்கட், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – சாமி கலைக்குமார், சண்டை இயக்கம் – மெட்ரோ மகேஷ், நடன இயக்கம் – மது மாலிக், தயாரிப்பு மேற்பார்வை – A நாகராஜ், தயாரிப்பு  – எம்.ஸ்ரீனிவாசன்,  சுந்தரி,  எஸ்.யோகேஷ், இசை, பாடல்கள், எழுத்து, இயக்கம், – R.ஜெயகாந்தன். படம் பற்றி இயக்குநர் ஆர்.ஜெயகாந்தன் பேசும்போது, “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த ‘உளிரி’ எனும் மீன...