ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

அரசியல்

தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய நிலை வரவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய நிலை வரவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் ஒரே நாளில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பி4, பி5 ஒமைக்ரான் புதிய வைரஸ் பரவுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,603 அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொற்று அதிகரித்தாலும் உயிர் இழப்பு இல்லாத நிலை. காய்ச்சல், சளி, தொண்டை வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 7 நாட்கள் தனி...
பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு- இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்!

பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு- இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வந்தனர். இந்த நிலையில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் கடந்த வாரம் ஒற்றை தலைமை கோஷத்தை திடீரென முன் வைத்தனர். எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. தலைமை பதவிக்கு கொண்டு வரும் நோக்கத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அணி திரண்டனர். சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் அனுமதி அளித்திருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால் பாதியிலேயே ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார். இந்த நிலையில் ஓ.பன்னீர் ச...
ஓ.பன்னீர்செல்வத்திடம் வரவு-செலவு விபரம் ஒப்படைப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திடம் வரவு-செலவு விபரம் ஒப்படைப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியையும் வகித்து வருகிறார். பொதுக்குழு கூட்டங்களில் பொருளாளர்தான் கட்சியின் வரவு-செலவு விவரங்களை வாசித்து தாக்கல் செய்வார். அதற்கு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும். அதுதான் கட்சியின் அதிகாரப்பூர்வ வரவு-செலவு கணக்காக எடுத்துக்கொள்ளப்படும். தற்போது எடப்பாடி பழனிசாமி அணியுடன் உரசல் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்றாலும் அ.தி.மு.க.வில் பொருளாளர் என்ற அடிப்படையில் அவரிடம் இன்று வரவு-செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டன. நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக இந்த வரவு-செலவு கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கூட்டத்திற்கு வராதபட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகி...
முதலமைச்சரை சந்தித்த  கமல்ஹாசன்!

முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமானு கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கமல்ஹாசன் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார். கமல்ஹாசன் தயாரிப்பில் திரைக்கு வந்துள்ள விக்ரம் திரைப்படம், 10 நாட்களுக்குள் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் விக்ரம் திரைப்படத்தை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்துள்ளார். விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இனிய நண்பர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மரி...
தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜ.க. தயாரா?- சீமான் கேள்வி!

தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜ.க. தயாரா?- சீமான் கேள்வி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் மாற்று கட்சிகளை சார்ந்த 60-க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா அரியக்குடியில் நடந்தது. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி செயலாளர் சாயல்ராம் தலைமை தாங்கினார். தற்போது ஆளும் தி.மு.க. அரசு எதை சாதித்து விட்டது? ஓராண்டு சாதனை என எதற்கு இந்த விளம்பரம்? பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு மற்றவர்களுக்கு பல மடங்கு கட்டணத்தை அதிகரித்து விட்டார்கள். ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கும், ஊழல் குற்றச்சாட்டு கூறுவதற்கும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது? பிரான்ஸ் நாட்டிடம் வாங்கிய ரபேல் விமான ஊழல் வழக்கின்போது பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்த கோப்புகளை காணவில்லை என்று கூறினீர்களே. கோப்புகளையே பாதுகாக்க முடியாத நீங்களா நாட்டை பாதுகாப்பீர்கள்? கேரளாவில் அரசு பள்ளி...
”வேணும்னா படிச்சிக்கப்போறாங்க நீங்க இந்தியை திணிக்காதீங்கப்பா அது தப்பு” என்கிறார் RJ பாலாஜி

”வேணும்னா படிச்சிக்கப்போறாங்க நீங்க இந்தியை திணிக்காதீங்கப்பா அது தப்பு” என்கிறார் RJ பாலாஜி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, politics, அரசியல், தமிழக அரசியல், நடிகர்கள்
”வேணும்னா படிச்சிக்கப்போறாங்க நீங்க இந்தியை திணிக்காதீங்கப்பா அது தப்பு” என்கிறார் RJ பாலாஜி   https://youtu.be/D0K7FRAFSrE
சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை வலுப்படுத்த நடவடிக்கை- பிரதமர் மோடி பேச்சு!

சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை வலுப்படுத்த நடவடிக்கை- பிரதமர் மோடி பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில்  இன்று நடைபெற்ற மாநில முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ஒரு நாடு- ஒரே வரி, ஒரு நாடு-ஒரே மின்கட்டமைப்பு, ஒரு நாடு- ஒரே மொபிலிட்டி கார்டு,  ஒரு நாடு-ஒரே ரேஷன் கார்டு ஆகிய முயற்சிகள் அனைத்தும் எங்களின் திடமான மற்றும் தெளிவான கொள்கைகளின் பிரதிபலிப்பு. சமீபத்தில் நாங்கள் 8 வருட ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை ஒரு தேசமாக வலுப்படுத்த நாங்கள் உழைத்து வருகிறோம். இந்த ஆண்டுகளில், சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற மந்திரத்தில் நாங்கள் நாட்டை முன்னேற்றி உள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் எளிதான வணிகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். இன்று உலகம் இந்தியாவின் செயல்திறனைப் பாராட்டுகிறது. ஜி20 நாடுகளின் பொருளாதாரத்தில் நாம் வேகமாக வளர்ந்...
IAS தேர்வில் தமிழக அளவில் 3ம் இடம் பிடித்த வாலிபர் சென்னையில் சி.என்.இராமமூர்த்தியிடம் வாழ்த்து பெற்றார்!

IAS தேர்வில் தமிழக அளவில் 3ம் இடம் பிடித்த வாலிபர் சென்னையில் சி.என்.இராமமூர்த்தியிடம் வாழ்த்து பெற்றார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
IAS தேர்வில் தமிழக அளவில் 3ம் இடம் பிடித்த வாலிபர் சென்னையில் சி.என்.இராமமூர்த்தியிடம் வாழ்த்து பெற்றார்! சமீபத்தில் வெளியான UPSC தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 87வது இடத்திலும், தமிழக அளவில் 3வது இடத்தை பிடித்தவர் சென்னையை சேர்ந்த பொறியாளர் சிவானந்தம் IAS . இவர் சென்னையில் உள்ள வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது IAS தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்ததற்கு சால்வை அணிவித்து சி.என்.இராமமூர்த்தி வாழ்த்தினார்....
தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்!

தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 5.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணித்தும் உரையாற்றுகிறார். விழாவில் முடிவுற்ற 5 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அந்த 5 திட்டங்கள் விபரம் வருமாறு:- தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதே போல் மதுரை-தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்...
250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை!

250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் புகுந்து இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, அருகில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் இன்று காலை 7.30 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் இருந்து வந்திருந்த 14 சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் ஆகியவற்றுக்குள் ஒரே நேரத்தில் 2 குழுக்களாக பிரிந்து சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த பணியாளர்களிடம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் குறித்தும் விசாரித்தனர். சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொட...