அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவாக பேசிய RBVS மணியன் கைது!!
சென்னை : ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவுபடுத்தி பேசிய, வி.எச்.பி. முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டார்.
சென்னை தியாகராயர் நகரில் வைத்து இன்று காலை தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்...
முத்துராமலிங்க தேவருக்கு கர்நாடகத்தில் சிலை வைக்க துணை முதல்வரிடம் கோரிக்கை!
பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு திரைப்படமாக தேசிய தலைவர் என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை ஏ.எம்.சௌத்திரி
இந்த சூழலில் கர்நாடக துணை முதல்வர்
DK சிவகுமார் அவர்களை அவரது இல்லத்தில் தேசிய தலைவர் திரைப்பட நாயகன் ஜெ எம் பஷீர் அவர்கள் AM சௌத்ரிதேவர் அவர்களுடன் கர்நாடக தேவர் அமைப்பை சார்ந்தவர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள் தேசிய தலைவர் கன்னடத்தில் ராஷ்டிரிய நேத்தா என்ற பெயரில் வெளியாவதற்கு வாழ்த்து தெரிவித்தார் நாயகன் தேவர் போலவே உள்ளதாக பாராட்டினார் கர்நாடகாவில் தேசிய தலைவர் தேவர் சிலை அம...
மொத்தம் 26 கட்சி.. பாஜகவுக்கு எதிராக பெங்களூரில் உருவான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி "INDIA, 38 கட்சிகளுடன் NDA கூட்டணி.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் இணைந்து 2வது கட்டமாக இன்று பெங்களூரில் சோனியா காந்தி தலைமையில் தீவிர ஆலோசனை நடந்தது. புதிய கூட்டணி உருவாகி உள்ளது. மேலும் அந்த கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 2வது நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைவால் இந்த கூட்டம் ஒரு மணிநேரம் தாமதமாக துவங்கியது.
நேற்றைய ஆலோசனையில் பங்கேற்காத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்பட இன்னும் ...
சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கியுள்ள 'சத்யதேவ்சட்டஅகாடமி'யை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சூர்யாவுக்கு வாழ்த்து சொன்னார்!
முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் கூறியிருப்பதாவது!
சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள #SathyadevLawAcademy-யைத் தொடங்கி வைத்தேன்.
இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி @Suriya_...