திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17
Shadow

NEWS

தூத்துக்குடி மாவட்டத்திற்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்

தூத்துக்குடி மாவட்டத்திற்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  தூத்துக்குடி, திருச்செந்தூர், கருங்குளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, புதூர், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி ஒன்றியங்கள், கோவில்பட்டி, காயல்பட்டினம் நகரங்கள், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதன் மண்டலங்களுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் செயலாளர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள் மறறும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கயத்தாறு, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், விளாத்திகுளம் ஒன்றியங்களுக்கான பொறுப்புகள் ...
டி.டி.வி தரப்பு புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க உள்பட மூன்று பெயர்கள் பரிந்துரை

டி.டி.வி தரப்பு புதிய கட்சிக்கு அம்மா தி.மு.க உள்பட மூன்று பெயர்கள் பரிந்துரை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகரில் வெற்றி பெற்ற குக்கர் சின்னத்தை தனது அணிக்கு வழங்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், தனி நபருக்கு அந்த சின்னம் அளிக்கலாம் என்றும் ஒரே அணியாக உள்ளவர்களுக்கு அளிக்க முடியாது என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் சின்னம் ஒதுக்குவது மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவே என தெரிவிக்கப்பட்டது. இதனால், புது கட்சி தொடங்கி அக்கட்சிக்கு குக்கர் சின்னத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில், அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்.ஜி.ஆர் அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று பெயர்களை தினகரன் தரப்பு இன்று கோர்ட்டில் சமர்பித்துள்ளது. எனினும், புதிய கட்சியை உடனே பதிவு செய்வது சாத்தியமில்லை இதனால் தேர்தல் ஆணையம் இடைக்கால ஏற்பாடு செய...
போக்குவரத்து துறை மீது ஸ்டாலினுக்கு திடீர் ஞானோதயம் ஏன்? – துணை முதல்வர் OPS கேள்வி

போக்குவரத்து துறை மீது ஸ்டாலினுக்கு திடீர் ஞானோதயம் ஏன்? – துணை முதல்வர் OPS கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் இன்று ஜெயலலிதா பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டதாக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’ என்றார். “வளர்ந்த மாநிலம் என்று கூறி தமிழகத்திற்கு தொடர்ந்து நிதி குறைப்பு செய்யப்படுகிறது. தமிழகத்தில் இருந்து வழங்கப்படும்  வரி வருவாயில் உரிய பங்கை மத்திய அரசு வழங்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறைக்கு...
அ.தி.மு.க.வில் இருந்து அனிதா குப்புசாமி விலகல்

அ.தி.மு.க.வில் இருந்து அனிதா குப்புசாமி விலகல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும், நாட்டுப்புற பாடகியுமான அனிதா குப்புசாமி அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து அனிதா குப்புசாமி கூறியதாவது:- அ.தி.மு.க.வில் இருந்து நான் விலகி விட்டேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே எனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டேன். ஆனாலும் நான் செல்லும் இடங்களில் மக்கள் என்னிடம் வந்து, இன்னுமா அ.தி.மு.க.வில் இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். எனவே தான் அதிகாரப்பூர்வமாக என் முடிவை அறிவித்து இருக்கிறேன். தற்போதைய முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி, மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது. எனவே தான் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்தேன். என் கணவருக்கு துணைவேந்தர் பதவியை கொடுக்காததால் தான் நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகியதாக கூறப்படுவதை முற்றிலும் மறுக்கிறேன். துணைவேந்தர் ஆகுவதற்கான அனைத்து தகுதிகளும் என் கணவருக்கு ...
பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது ஐகோர்ட்

பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது ஐகோர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இயக்குனர் பாரதிராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மக்கள் முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்து மக்கள் முன்னணி சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த ஐகோர்ட், இயக்குனர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. வன்முறையை தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதாக அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  ...
தீபா வீட்டுக்கு வந்த போலி அதிகாரிக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை – சென்னை போலீஸ்

தீபா வீட்டுக்கு வந்த போலி அதிகாரிக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை – சென்னை போலீஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ. தீபாவின் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரி என ஒருவர் வந்துள்ளார். பின்னர், போலீசார் வருவது தெரிந்ததும் அவர் ஓட்டம் பிடித்தார். நேற்று முன்தினம் இரவு அந்த ஆசாமி போலீசில் சரணடைந்தார். அவரது பெயர் பிரபாகரன் என்று தெரிவிக்கப்பட்டது. தீபாவின் கணவர் மாதவன் சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி, நடிக்கச்சொன்னார் என பிரபாகரன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியது. அதற்கு ஏற்றார்போல மாதவன் தலைமறைவானார். இந்நிலையில், பிரபாகரனுக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை என சென்னை மாநகர போலீசார் விளக்கமளித்துள்ளனர். போலி அடையாள அட்டை மற்றும் சோதனை வாரண்டை தயாரித்தது பிரபாகரன்தான் எனவும் மாதவனுடன் பிரபாகரன் தொலைபேசியில் பேசியது பொய்யான தகவல் என்றும் தெரிவித்தனர்.  ...
பாலியல் தொல்லை புகார்… அவதூறு வழக்கு தொடருவேன் பதறும் அமலாபால்..!

பாலியல் தொல்லை புகார்… அவதூறு வழக்கு தொடருவேன் பதறும் அமலாபால்..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நடிகை அமலா பால், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தார். அதன் பின் அந்த தொழிலதிபரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அமலா பால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "ஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மலேசியாவில் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்கும் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை குறுக்கு கேள்வி கேட்டபோது, அவர் அலட்சியமாக உனக்கு தெரியாதா ? என்ற பாணியில் பேசினார். நாங்கள் பேச...
மின்வாரிய ஊழியர்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி..!

மின்வாரிய ஊழியர்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் பிப்ரவரி 15-ம் தேதி மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளனர். மின்வாரிய ஊழியர்களுக்கு 1.1.2015 முதல் ஊதிய உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை குழுவுடன் தொழிற்சங்கங்கள் 4 கட்டமாக ஏற்கெனவே பேச்சு நடத்தின. தமிழ்நாடு மின்சார வாரியம், அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தை கடந்த ஜன.22-ஆம் தேதி, தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மின்வாரிய அதிகாரிகள், தொழிலாளர் நலத் துறை ஆணையர் பங்கேற்புடன் நடைபெற்றது. இவற்றை நிர்வாகம் ஏற்க மறுத்ததால் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பெருந்திரள் தர்ணா, காத்திருப்ப...
தமிழகத்தில் இனி பட்டையைக் கிளப்பப் போகுது வெயில்..!

தமிழகத்தில் இனி பட்டையைக் கிளப்பப் போகுது வெயில்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகம் மற்றும் புதுவையில் இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: சென்னையில் தற்போது மேகக்கூட்டங்கள் நிலவுவதன் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலையின் அளவு உயர்ந்துள்ளது. காலநிலையானது குளிர் காலத்திலிருந்து கோடை காலத்தை நோக்கி மாறத் துவங்கியுள்ளதால் , சூரியன் விரைவாகவே உதித்து வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரும்....
‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ பட ஒரு நாள் வசூலின் ஒரு பகுதி தமிழ் இருக்கைக்கு வழங்க ஒப்பந்தம்..!

‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ பட ஒரு நாள் வசூலின் ஒரு பகுதி தமிழ் இருக்கைக்கு வழங்க ஒப்பந்தம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
நிஜம்தான். தமிழர்களது வீரத்தின் அடையாளமாக, தொன்றுதொட்டு குறிப்பிடப்படுவதில் ஜல்லிக்கட்டும் ஒன்று. தமிழ் மண்ணான இம்மாநிலத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடப்பதைத் தடுக்கும் முயற்சிக்கு எதிராக, தமிழ் இளைஞர்களிடம் கடந்த ஆண்டு ஏற்பட்ட எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டு, 'ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017' என்ற பெயரிலேயே திரைப்படமாக்கியது - அஹிம்சா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்புக் குழு. அதேபோல, இன்று விவேகம் என, சொல்லப்படும் அறிவின் அடையாளமாக நிற்கும் பல்கலைக்கழகங்களில் - உலகப் புகழ் பெற்றது ஹார்ட்வேர்ட்! அதில் தமிழ் மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்க தனி இருக்கை அமைக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. தமிழோடு தொடர்பு என்பதால் மட்டுமின்றி, தமிழின் சிறப்பு, தமிழர்களின் வீரம் உள்ளிட்ட பலவற்றையும் உலக அளவில் பறைசாற்றத் துடிக்கும் இ...