திரைப்படங்கள்
காற்றில் பறந்த அரசு ஆணை உச்சத்தில் டிக்கெட் விலை கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!
காற்றில் பறந்த அரசு ஆணை உச்சத்தில் டிக்கெட் விலை கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!
ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜீத் நடித்த விஸ்வாசம் இரு படங்களும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இரு நடிகர்களும் வியாபார ரீதியாக பேசப்படும் நடிகர்கள் என்பதால் இந்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அரசு நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி தராத போதும் சில இடங்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. அதோடு கோர்ட் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு பிரமாண்டமான கட் அவுட்களும் தியேட்டரை மறைக்கும் பிரமாண்டமான அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது. அதே போல டிக்கெட் விற்பனையில் அரசின் உத்தரவு எதுவும் பின்ப்ற்றப் படவில்லை. ஆயிரங்களில் டிக்கெட் விலை. லோக்கல் போலீசாருக்கு இந்த விதிமீறல்கள் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிக்கிறார்கள். ரஜினி அரசியல் பரபரப்புகளுக்கிடையில் பேட்ட வந்திருப்ப...
2018ம் ஆண்டின் மிக சிறந்த படம் பரியேறும் பெருமாள் நார்வே திரைப்பட விருதுக்கு தேர்வு..!
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கியபயணத்தில் இந்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது. தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான சிறந்த தெரிவில் 20 திரைப்படங்கள் எம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுகள் எமது விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவான தெரிவுகள். தமிழ்நாட்டில் வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கு இந்த வருடத்தில் 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றது.10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருதுகள் அறிவிப்பு:சிறந்த படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் எமது குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து எமது நடுவார்களால் தெரிவுசெய்யப்பட்ட 20 முழுநீளத் திரைப்படங்களில் 2019-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் இங்கே அறியத்தருகின்றோம்.அந்த வகையில் சிறந்த படமாக பா.ரஞ்ச...
100 நாட்கள் விழா கொண்டாடி போரடித்த காலம் – கனா வெற்றி விழாவில் சத்யராஜ் பேச்சு
திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கிரிக்கெட் தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட சிவா சாருக்கு நன்றி. எந்த ஹீரோவும் இல்லாமலேயே ஒரு ஸ்டாருக்குண்டான ஓபனிங்கை இந்த படத்துக்கு பெற்று தந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்....
ஆரவ் நடிப்பில் சரண் இயக்கும் மார்க்கெட் ராஜா MBBS
தமிழ் சினிமாவின் வணிக சினிமாக்களில் மிகச்சிறந்த இயக்குனராக பாராட்டப்பட்ட, மறுக்க முடியாத ஒரு முக்கியமான இயக்குனர் சரண். பெரிய நடிகர்களுடனும் பணிபுரிந்த அவரது திரைப்படங்கள் எப்போதும் பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடியவையாக இருந்தது. இயக்குனர் சரண் தற்போது தனது புதிய படமான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படப்பிடிப்பை துவக்கியிருக்கிறார். இதில் பிக் பாஸ் புகழ் ஆரவ் மற்றும் தெலுங்கு நடிகை காவ்யா தப்பார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சரணின் படங்கள் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த முறை அவர் இதுவரை செய்யாத புது முயற்சி ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்.
இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது' "என் முந்தைய திரைப்படங்களில் நான் ஃபேண்டஸியை முயற்சி செய்ததில்லை. இந்த மார்க்கெட் ராஜா MBBS படத்தில் அதை செய்ய இருக்கிறேன், இதில் ஆக்ஷன் மற...
தெலுங்கில் ஹிட் ஆன உஷாரு தமிழில் ரீமேக் ஆகிறது..!
திரையுலகிற்கு எப்போதுமே ஆக்சிசனாக இருப்பது புது முகங்களை வைத்து எடுக்கப் படும் படங்களே..ஜிக் ஜாக் இல்லாமல் யதார்த்த படைப்புகளே சினிமாவின் சக்சஸ் பார்முலா..
அந்த வகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் "உஷாரு"உஷாரு என்றால் தமிழில் புத்துணர்வு என்று பொருள் படும் ..சமீபத்தில் வெளியான இந்த படம் ஆந்திராவில் கொண்டாடப் படும் படமாக கருதப் படுகிறது..சுமார் 3.50 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்கு திரையுலகின் வசூல் கணக்கு... இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.
இந்த படத்தை ஜீவா நடித்து வெற்றி பெற்ற தெனாவட்டு படத்தை இயக்கிய V.V.கதிர் 14 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்..பலத்த போட்டிக்கு பிறகு படத்தின் ரீமேக் ரைட்சை கைப்பற்றிய காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் J.பணீந்திரகுமார் தயாரிக்கிறார்...இவர் ஏற்கெனவே பிரப...
மாணிக் என் வாழ்வில் நடந்த உண்மை கதை – இயக்குனர் மார்ட்டின்
மாணிக்" என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை கதை - இயக்குனர் மார்ட்டின் !"மாணிக்" திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் மார்ட்டின் பேசியது :- நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு மிகப் பெரிய ஆசை ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள்.
சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். ஆனால் நான் செலக்ட் ஆகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றேன். இறுதிச் சுற்று வரை சென்றேன். இயக்குநர் சுந்தர் C அவர்கள் என்னை இதே பாணியில் பணியாற்ற சொன்னார். நானும் லாஜிக் இல்லாமல் கதை செய்யும் பாணியில் இப்போது வரை பயணித்து 'மாணிக்' படத்தை இயக்கியுள்ளேன். 'மாணிக்' என்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்றே கூறலாம்.
இப்படத்தின் கதாபாத்திரங்க...
பிரான்மலை கோடங்கி விமர்சனம்
பிரான்மலை விமர்சனம்
காதல் படத்தை இன்னொரு டைமன்ஷனில் காட்டியிருக்கும் படம் தான் பிரான்மலை.
வளரி கலைக்கூடம் தயாரிப்பில் வர்மன் , நேஹா ஜோடி நடித்துள்ள பிரான்மலை சமூகத்தில் இப்போதும் யதார்த்தம் இதுதான் என்பதையும், வெளியே தெரிவதெல்லாம் வேஷம் என்பதையும் பட்டவர்த்தனமாக வலியோடு சொல்கிறது.
கண்டிப்பான அப்பா வேலா ராமமூர்த்தி தன் மகன் வர்மன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வெளியூருக்கு வேலைக்கு போக சொல்கிறார். அப்பாவின் பேச்சை மீற முடியாமல் அதே நேரம் தனது நண்பன் பிளாக் பாண்டி இருக்கும் ஊருக்கு செல்கிறார். அங்கே ஆசிரமத்தில் வளரும் ஹீரோயின் நேஹாவை பார்க்கிறார். பார்த்ததும் காதல். நேஹாவுக்கு திடீரென ஒரு சிக்கல் அதை ஹீரோ எப்படி சரி செய்தார். இவர்கள் காதல் கை கூடியதா. காதலர்களை வேலா ராமமூர்த்தி என்ன செய்கிறார் என்பது தான் மீதி கதை. அறிமுக நடிகர் என்றே தெரியாமல் வர்மன் தன் கதாபாத்திரத்தில் அத...
அடல்ட் ஹாரர் காமெடி படத்தில் யோகிபாபு ஹீரோவாம்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் 'அடல்ட் ஹாரர் காமெடி' ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். "இந்த படத்தை நான் 'அடல்ட் ஹாரர் காமெடி' என்று குறிப்பிடுவதை விட 'குறும்பு' வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான். வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத...
சினிமாகாரர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் – ஆரி தகவல்
'ஸரோமி மூவி கார்லேண்டு' நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது, “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போன்று இருக்கிறதே என்கிற உணர்வு நிச்சயம் ஏற்படும...

