திரைப்படங்கள்
‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம்..!
எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படத்தின் வேலைகள் ஜரூராக நடைபெற்று வந்தன.
இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. இந்தப்படம் ஒருகட்டத்தில் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன்.
ஆனால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதனால் அந்தப்படத்தை விநியோகஸ்தர்களுக...
26 சர்வதேச விருதுகளை வென்ற டூ லெட் திரைப்படம்
65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.
நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய விஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருப்பதாக இயக்குநர் செழியன் கூறினார்.
இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர். வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ படத்தை தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக படக்க...
பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0
பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0
ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் லைகா தயாரிக்கும் ரஜினியின் 2.0 படம் 29ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தென்னிந்திய மொழி படங்களில் அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை ரஜினியின் 2.0 பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ரஜினி நடித்த முத்து படம் சீனாவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.
அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிக துல்லியமான இசையை கேட்க 4டி டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. படமும் 3டி தொழில்நுட்பத்தில் பார்க்க முடியும். இந்தியாவில் 10 திரையரங்குளில் மட்டுமே இப்போதைக்கு இந்த வசதி இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை இரண்டு திரையரங்குளில் மட்டுமே இந்த நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரில...
சினிமாவை வாழவைக்க நமக்குள் ஒற்றுமை அவசியம் – நடிகர் ஆரி ஆவேசம்
படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் ஜேக்கப் பேசுகையில்,
இப்படத்திற்காக முதலில் 2 பாடல்கள் தான் என்று முடிவு செய்தோம். பிறகுதான் 3 பாடல்களை சேர்த்து 5 பாடல்கள் இசையமைத்தோம். கிரிக்கெட், கபடி, மற்றும் காதல் என்று மூன்றும் சேர்ந்த கலவையாக இப்படம் இருக்கும்.
டூரிங் டாக்கீஸ் படத்தின் இயக்குனர் இஷாக் பேசுகையில்,
அபிலாஷ் எனக்கு சிறுவயது முதலே எதிரி. சிறுவயதில் நான் வீட்டிற்கு வரும் நேரத்தில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடர் ஓடிக்கொண்டிருக்கும். அத்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் அபிலாஷ் நடித்திருப்பார். நான் சினிமாவிற்கு வந்தபிறகு நானும் அபிலாஷூம் ஒரே அறையில் தங்கியிருந்தோம். எனக்கு ஒரு நல்ல நண்பர். நான் இயக்கிய ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன். ஆனால், ‘தோனி கபடி குழு’ படத்தில் அவர் கதாநாயனாக நடிக்கிறார். இப்படத்தை சம்பந்தபட்டவர்களைவிட நான்தான் அதிகமாக பார்த்திருக்கிறே...
மேதகு பிரபாகரனுக்கு பெருமை சேர்க்குமா சீறும்புலி!
மேதகு பிரபாகரனுக்கு பெருமை சேர்க்குமா சீறும்புலி! #Prabhakaran #Vijay #GayathriRaghuram #Nayantara #Atlee
https://youtu.be/bARAx1fdkgQ
அட்லி படத்தில் விஜய் ஜோடியானார் நயன்தாரா..!
ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்
கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கும்
"தளபதி 63" படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா
தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளிபதி விஜய் நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் "தளபதி 63" படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கின்றனர்.
தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா "தளபதி 63" படத்தில் ஜோடி சேரவுள்ளார்.
பல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் நடிகை நயன...
“எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
“எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
நடிகர் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார்.
இந்த புகார் அடிப்படையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) போடப்போவதாக செய்திகள் வெளியாயின.
நடிகர் சங்க தேர்தலின் போதே விஷாலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் சிம்பு. எனவே விஷால் சிம்புவை பழி வாங்குகிறார் என்று சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.
தற்போது மீண்டும் கைவசம் நிறைய படங்களோடு வலம் வருகிறார் சிம்பு. சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்து வரும், ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படம் உருவாகிறது.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டி...
என் கையில் இருக்கும் பீர் பாட்டில் ஒரு தடயம் – மருத்துவர் ராமதாஸ் புகாருக்கு விஷால் பதில்
விஷால் அடுத்து நடிக்கும் படம் அயோக்யா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த போஸ்டரில் விஷால் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தது சர்ச்சையானது. ராமதாஸ் உள்ளிட்ட சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த கண்டனங்களுக்கு விஷால் பதில் அளித்துள்ளார். ‘நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் இல்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது. இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன்.
நான் துப்பறியும் ஒரு குற்றத்தில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது. இதைத் தான் அந்த போஸ்டரில் சொல்லி இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்...
ஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்..!
ஜெய் நடிக்கும் 'நீயா 2' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட்
ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்' தமிழ்நாட்டின் உரிமத்தை வாங்கியுள்ளது.
1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் 'நீயா'. தற்போது 'நீயா 2' படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ். மேலும், ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா போன்ற மக்களைக் கவரக்கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். 'நீயா' படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த 'ஒரே ஜீவன்' பாடலை மறுஉருவாக்கம் செய்திருக்கின்றனர்.
அதோடு, ஷபீர் இச...

