தமிழ் சினிமாவில் உருவாகும் புது புரூஸ்லீ…!
S.K.Aman Film Productions சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘புதிய புரூஸ்லீ’. இந்தப் படத்தில் புருஸ் சான் என்பவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். முளையூர் ஏ.சோணை இப்படத்தை இயக்கிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது விழா விருந்தினர்கள் ஒவ்வொருவராய் மேடையேறும் போது, ஒரு இளைஞர் அச்சு அசலாக “புரூஸ் லீ” போலவே மேடையேற அரங்கமே ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தது.
முதலில் பேசியது இயக்குநர் முளையூர் ஏ.சோனை தான். மனிதர் 18 வருட காத்திருப்பில் கிடைத்த மேடை என்பதால் கொஞ்சமல்ல, நிறையவே பேசினார்.
அவர் பேசியதாவது, “உலக சூப்பர் ஸ்டாரான ‘புரூஸ்லீ’யின் தீவிர ரசிகனான எனக்கு அவரைப் போன்ற தோற்றத்தில் நாயகன் ‘புரூஸ் சானை’ பார்த்ததுமே அந்தக் கேரக்டரை மனதில் ...









