ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகள் குஷி விரைவில் பாலிவுட் படத்தில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி அறிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் கரண் ஜோகர் இயக்கவுள்ள புதிய படத்தில் குஷியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தவுள்ளார். இவர் ஏற்கனவே ஆலியா பட், சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவான், உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
...
கத்ரீனா கைப் நடிக்க பி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது..!
தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் பிடி.உஷா. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத வீராங்கனை. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 103 பதக்கங்களைக் குவித்துள்ளார்.
இயக்குனர் ரேவதி வர்மா பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதாக அறிவித்து இருந்தார்.
அந்த பயோப்பிக்கில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோபிக் படத்தில் நடித்தார். தற்போது பி.டி.உஷா பயோபிக்கில் கத்ரீனா கைப் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கும் ரேவதி வர்மா சமீபத்தில் மும்பைக்கு சென்று இருக்கிறார். கத்ரீனா கயூபிடம் பி.டி.உஷா பயோபிக்கின் கதையை கூறி இருக்க...
ரஜினியின் 167-வது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது
இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது.
இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது....
ஞானவேல் ராஜா தயாரிப்பில் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள தேவராட்டம் பட பத்திரிகையாளர் சந்திப்பு .ந்டந்தது.
கவுதம் கார்த்தி பேசும்போது,
"இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது.
மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறா...
தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள் அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம் தான். தற்போது அப்படியொரு தருணம் வாய்த்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சே
துபதி புரொடக்ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன. படத்தின் பெயர் லாபம்.
இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.
தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகன...
எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "எனை சுடும் பனி" என்று பெயரிட்டுள்ளனர்..
இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்...இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் "என் காதலி சீன் போடுறா " படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் கதா நாயகனாக உயர்வு பெறுகிறார்.
கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்...
கதா நாயகிகளாக உபாசனா RC , சுமா பூஜாரி நடிக்கிறார்கள்.
மற்றும் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா.
படத்தின் துவக்கவிழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது...
படத்தை பற்றி இயக்குனர் ராம்ஷேவாவிடம் கேட்டோம்..
சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள...
செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " இ.பி.கோ 302 " என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கஸ்தூரி கதா நாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார்.
ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது.
இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை.
இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குனரிடம் பேசிய போது...
கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாத படி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது...செத்தவன் யார் என்றும் தெரியவில...
இலங்கையில் பிரபலமான பாலிஸ் காசினோ சூதாட்ட கிளப்பில் ஒரு மணி நேர வேலை. சூதாட்டம் ஆடவேண்டும் அங்கு வரும் பிரபலங்களுடன் மகிழ்ச்சியாக பேச வேண்டும்.
ஸ்ரீலங்கா காசினோ சூதாட்ட கிளப்பில் விளையாட கோடிகள் கொடுத்து காஜல் அகர்வாலை அழைத்திருக்கிறார்கள்.
அவரும் போய் 2 நாட்கள் ஜாலியாக கிளப்பில் போய் சூதாடிவிட்டு வந்திருக்கிறார்.
காஜல் ஊர் திரும்பிய சில தினங்களில் அங்கு குண்டு வெடிப்பு நடந்து பல நூறு பேர் பலியானதால் காஜல் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்.
...
மதராசபட்டினம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான எமி, மிகக் குறைந்த காலத்திலேயே விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலருடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் 2.0 படத்துக்கு பிறகு எமி ஜாக்சன் எந்த படத்திலும் தோன்றவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக போகும் எமி, தனது நீண்டநாள் காதலர் ஜார்ஜ் பனயிடோவை திருமணம் செய்யவுள்ளார். எமி ஜாக்சன் திருமண விழா லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
https://www.instagram.com/p/BwOkoVxBSJ2/?utm_source=ig_share_sheet&igshid=1ekeeosi9zucd
சமீபத்தில்தான் எமி தான் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிவித்தார். கருவுற்று 15 வாரங்கள் ஆன எமி, தற்போது இந்த வீடியோவை coming soon என்று பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது....