400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.
400-வது படத்தில் நடித்து வரும் 'சௌக்கார்' ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் - இயக்குநர் ஆர்.கண்ணன்.
'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகி தான். தெலுங்கில் 'சௌக்காரு' என்ற படத்தில் என்.டி.ராமாராவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு ஜானகி என்ற பெயருக்கு முன் 'சௌக்காரு' என்ற பெயரை இணைத்து 'சௌக்கார்' ஜானகி என்று அழைக்கப்பட்டார். 1952-ம் வருடம் 'வளையாபதி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், நாகேஷ், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம்.ராஜன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும் சிவாஜி கணேசன், ஜெமினி கணேச...









