ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

சினி நிகழ்வுகள்

ஜனவரியில்தான் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார்: சத்திய நாராயணராவ் தகவல்

ஜனவரியில்தான் ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார்: சத்திய நாராயணராவ் தகவல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை ஜனவரியில் வெளியிடுவார் என, ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் தெரிவித்தார். தருமபுரியில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள, நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் இன்று (புதன்கிழமை) தருமபுரி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், "தன் ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரின் அன்புக்கும் உரியவராக நடிகர் ரஜினிகாந்த் உள்ளார். அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக நல்லதே செய்வார். டிசம்பர் மாதத்தில் அவரது பிறந்த நாளில் புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்பில்லை. ஆனால், ஜனவரியில் வெளியிடலாம். ரஜினி அரசியலுக்கு வந்தபின் தமிழக மக்கள் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ரஜினியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போட்டோ ஷூட் நிகழ்ச்சி மீண்டும் ஜனவரியில் நட...
நவ.30 தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் கந்து வட்டி குறித்து முக்கிய முடிவு: ஞானவேல் ராஜா

நவ.30 தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் கந்து வட்டி குறித்து முக்கிய முடிவு: ஞானவேல் ராஜா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  அசோக்குமார் தற்கொலை வழக்கில், இயக்குநர், நடிகர் சசிகுமாருடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல் ராஜா, கந்து வட்டி குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார் விசாரணை தொடர்பாக தயாரிப்பாளர் சங்க செயலாளர் என்ற முறையில் விளக்கமளிக்க வந்தேன். அசோக்குமார் மரணம் தொடர்பாக விளக்கமளித்தோம், அடுத்தகட்ட விசாரணைக்கு நாளையும் வரவுள்ளோம் அசோக்குமாரையும் அவரது குடும்பத்தினையும் தவறாக பேசியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எம்.ஜி.ஆர்.காலத்திலிருந்து பைனான்சியர்கள் உள்ளனர் ஆனால் வசூலிக்கும் முறையில் தான் தவறு உள்ளது. வருகின்ற 30-ம்தேதி தயாரிப்பாளர் சங்ககூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் தயாரிப்பாளர்களிடம் கந்து வட்டி தொடர்பாக கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளோம்.” இவ்வாறு ஞ...
மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் – எழில் கூட்டணி

மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் – எழில் கூட்டணி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் எழில் இயக்குகிறார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'யோகி' பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் - எழில் இணையும் இரண்டாவது படம் இது. பெயரிடப்படாத இப்படத்தை துஷ்யந்த் தயாரிக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார். முருகன் கதை எழுத ஜோதி அருணாச்சலம் வசனம் எழுத உள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகும் 12-வது படம் இது என்பது கவனிக்கத்தக்கது. இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது....
“டிக் டிக் டிக்” படத்தின் புதிய அப்டேட்

“டிக் டிக் டிக்” படத்தின் புதிய அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாகிறது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாகிறது. சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்லவரவெற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாக இருப்பதாக இசையமைப்பாளர் இமான் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  ...
பீட்டா-வுகாக நிர்வாண போஸ் கொடுத்த சன்னி லியோன்!

பீட்டா-வுகாக நிர்வாண போஸ் கொடுத்த சன்னி லியோன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டா-வின் விளம்பரம் ஒன்றிற்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் நிர்வாணமாக காட்சியளித்துள்ளனர். இந்த விளம்பரத்தில் ‘Ink, Not Mink! Be Comfortable in Your Own Skin, and Let Animals Keep Theirs.’ எனும் வாசகம் குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, மனிதரின் தோலைப் போல் மிருகங்களின் தோலும் மதிப்புமிக்கது, நாம் நிம்மதியாக வாழ விரும்புவது போல் அவற்றையும் வாழ விடுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றினையும் அவருடன் இணைந்து பீட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக அசைவத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என அரைநிர்வாணமாக புகைப்படம் ஒன்றில் சன்னிலியோன் தோன்றியது குறிப்பிடத்தக்கது!...
டிரம்ப் மகளுக்கு சமந்தா ஸ்பெஷல் பரிசு

டிரம்ப் மகளுக்கு சமந்தா ஸ்பெஷல் பரிசு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு தெலங்கானாவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா நேரில் வந்திருந்தார். அவருக்கு சமந்தா சேலை பரிசளித்தார். தெலங்கானா மாநில கைவினை பொருட்கள் விளம்பர தூதராக இருக்கிறார் சமந்தா. தனது மாநிலத்துக்கு வரும் டிரம்ப் மகளுக்கு பரிசளிக்க எண்ணினார். அதற்கு பொருத்தமான பரிசு பற்றி ஆலோசித்தவர் இறுதியாக கோல்லம்பமா சேலைகளை வழங்க முடிவு செய்தார். கைத்தறியில் இது நெய்யப்படுகிறது. அவரது தேர்வை அரசு அங்கீகரித்ததுடன் தனது பங்காகவும் அதே வகையில் உருவாக்கப்பட்ட பல்வேறு டிசைன் சேலைகளையும் இவாங்காவுக்கு வழங்கியது. இதையடுத்து இவாங்காவுடன் பாரம்பரியமான கோல்லம்பமா சேலைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்கிறது. நடிப்பு, இல்லற வாழ்க்கையில் சமந்தா கவனம் செலுத்தி வந்தபோதும் கைத்தறி ஆடைகளை விளம்பரப்படுத்தும் தூதராகவும் தனது பங்களிப்பை செய்...
நடிகை தீபிகா படுகோனே தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த பா.ஜ. பிரமுகர் பதவி ராஜினாமா

நடிகை தீபிகா படுகோனே தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த பா.ஜ. பிரமுகர் பதவி ராஜினாமா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் டிசம்பர் 1–ந்தேதி திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வராமல் தள்ளிவைத்து விட்டனர். பத்மாவதி படம் வெளியானால் திரையிடப்படும் தியேட்டர் தீ வைத்து கொளுத்தப்படும் என அரியானா மாநில பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் சுராஜ் பால்  அமு கூறி இருந்தார்.  தீபிகா படுகோனே, படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் தலைகளுக்கு ரூ.10 கோடி பரிசும் அறிவித்தார் சுராஜ் பால்  அமு. பா.ஜ.க. ஊடகத் தலைவரின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து  குர்கானில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சுராஜ் பால் அமு தனது பாரதீய ஜனதா செய்தி தொட...
கார்த்தி படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம் மன்னிப்பு கேட்ட படக்குழு..!

கார்த்தி படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம் மன்னிப்பு கேட்ட படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கார்த்தி-ரகுல்பிரீத்சிங் ஜோடியாக நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. வடநாட்டில் இருந்து வந்து கொலை-கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சென்னை புறநகர் பகுதிகளை கதிகலங்க வைத்த பவாரியா கொள்ளையர்கள் பற்றிய உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. வினோத் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் குற்றப்பரம்பரை என்ற வார்த்தை இடம்பெற்று உள்ளது. இது குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்துவதுபோல் உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் வற் புறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற் படுத்திய காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளன.   இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களை வைத்து மட்டுமே இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. எந...
நீதிமன்றம் செல்லும் மருமகள்… கோபத்தில் சிவகுமார்…!

நீதிமன்றம் செல்லும் மருமகள்… கோபத்தில் சிவகுமார்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
  கரூர் நாச்சியார் பட விவகாரம் தொடர்பாக நடிகை ஜோதிகா, டைரக்டர் பாலா ஆகியோர் மீது கரூர் கோர்ட்டில் இன்று மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டைரக்டர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரைலரின் நடிகை ஜோதிகா கெட்ட வார்த்தை பேசிய காட்சி இடம்பெற்றது. https://youtu.be/bg3hJuBtE-8 இதற்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜன் மேட்டுப்பாளையம் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா அவதூறாகவு...
மீண்டும் தள்ளிப்போன ரஜினியின் ‘2.0’ ….?!

மீண்டும் தள்ளிப்போன ரஜினியின் ‘2.0’ ….?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.0.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போனது. ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தையொட்டி 2.0 திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால் ஓரிரு மாதங்கள் தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது. ...