ரஜினிகாந்த் பாபா முத்திரையில் இருந்த தாமரை திடீரென மாயம்..!
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு கடைசி நாளில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது.
அதிலும் தான் ஆன்மீக அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினி அறிவித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ரசிகர்கள் சந்திப்பின் கடைசி நாளில் ரஜினியின் ஆஸ்தான ஆன்மீக குருவான பாபா முத்திரையை ரஜினி காண்பித்தார். அதைத்தொடர்ந்து பாபா முத்திரைதான் ரஜினி கட்சியின் சின்னமாக இருக்கக்கூடும் என பேசப்பட்டது.
ரஜினி ரசிகர்கள் சந்திப்பு நடந்த மேடையில் பாபா முத்திரை வைக்கப்பட்டிருந்தது. வெண்மையான தாமரை முன்பாகவும், அதன் பின்னால் பாபா முத்திரையும் இருந்தது. இந்த முத்திரையை சுற்றி நாகம் இருப்பது போலவும், முத்திரையின் மேலே ஒரு பக்கம் நாகத்தின் தலை படமெடுக்கும் நிலையிலும், இன்னொரு முனை வால் பகுதியாகவும் காணப்பட்டது.
நல்ல வேளை நாகம் எந்த அரசியல...









