டிஎன் 2026 – திரைப்பட விமர்சனம்
வட மாநிலத்தை சேர்ந்த நட்டி நட்ராஜ், சென்னைக்கு பிழைப்புக்காக வந்து எதிர்பாரதவிதமாக நடிகராகி விடுகிறார். அவரது முதல் படம் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, மக்கள் மனதில் அடுத்த எம்.ஜி.ஆர் என்ற இடத்தையும் பிடித்து விடுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ஜமீன்தார் தம்பி ராமையாவும், நட்டி எம்.ஜி.ஆர் இடத்தை பிடிப்பார் என்பதை கணிப்பதோடு, அவருக்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து சினிமாவில் அவரை உச்ச நடிகராக்கும் பயணத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
சினிமாவில் உச்ச நடிகராக உயரும் நட்டியை அரசியல் பேச வைப்பதோடு, புதிய அரசியல் கட்சியையும் தொடங்க வைக்கும் தம்பி ராமையா, 2026 ஆம் ஆண்டு அவர் தான் தமிழகத்தின் முதல்வர், என்ற நம்பிக்கையையும் அவரது மனதில் பதிய வைத்து அரசியலில் பயணிக்க வைக்கும் நிலையில், நட்டி நட்ராஜ் எடுக...
'Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்பட விமர்சனம்
காதலித்து திருமணம் செய்து கொண்ட எஸ்.ஜெ.சூர்யா, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால், இனி எந்த காதலர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்பட கூடாது என்பதற்காக, பல வருட உழைப்பிற்குப் பிறகு 2040 ஆம் ஆண்டில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany - LIK) என்ற செயலியை உருவாக்குகிறார். இந்த செயலி மூலம் தங்களுக்கு பொறுத்தமான காதல் ஜோடியை தேர்வு செய்வது முதல், அவர் எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதோடு, 24 மணி நேரமும் அவர்களை கேமரா மூலம் கண்காணிக்கவும் முடியும்.
இதனால், காதலர்களில் யார் ஏமாற்றினாலும், அது அவர்களுக்கு தெரிந்து விடுவதோடு, காதலர்கள் பிரிய நினைத்தால் இழப்பீடு வாங்கிக் கொடுத்து அதை நிறைவேற்றுகிறது இந்த லிக் செயலி. காதலர்களிடம் மட்டும் இன்றி, தம்பதிகளிடமும் பெரும் வரவேற்ப...
“வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால "திருமண வாழ்வை" மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ''நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின் இசையமைத்து, சுபலக்ஷினியுடன் இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை எழுதியுள்ளார்.
மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில...
“ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!
அட்லீயின் உலகளாவிய ஃபாண்டஸி-ஆக்ஷன் திரைப்பட அறிவிப்பு !!
இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது.
“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி-ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்...
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில்,
படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது..,
இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்...
நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு!
டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்" படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது.
இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார் பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.
இன்றைய விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு ஃபைவ் ஸ்டார் செந்தில் ஃபைவ் ஸ்டார் கல்யாண் கமல்போரா. SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ் சத்யா ஆதேஷ்பாலா, மோகன்லால், சந்தோஷ்பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிர...
’லீடர்’ திரைப்பட விமர்சனம் 3.5/5
தூத்துக்குடியைச் சேர்ந்த கார் மெக்கானிக்கான நாயகன் லெஜண்ட் சரவணன், தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். தாய் இல்லாத தன் மகள் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர், மகளுக்காக எதையும் செய்யும் துணிச்சல் மிக்கவர்.
தூத்துக்குடி துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வில்லன் பாகுபலி பிரபாகரன், மூலம் நடக்க இருக்கும் நாசவேலையை தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா முயற்சிக்கிறார். அது முடியாமல் போக, துறைமுகத்திற்குள் அடிக்கடி சென்று வரும் லெஜண்ட் சரவணனை வைத்து அந்த வேலையை செய்ய முடிவு செய்கிறார். அதன்படி, அவரது மகளை வைத்து ஆண்ட்ரியா போடும் திட்டத்தால் லெஜண்ட் சரவணன், பிரபாகரனின் கடத்தல் பொருளை போலீஸிடம் சிக்க வைப்பதோடு, அவரது சாம்ராஜ்யத்தையே அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்.
அதற்கு ஏற்றவாறு லெஜெண்ட் சரவணனின் ...
கார் ஓட்டுநராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, அளவான குடும்பம், வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக இருந்தாலும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார். அவசரத்திற்கு கடன் வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, பல்வேறு ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் அவதிப்படும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலாக சொல்வதே ‘கார்மேனி செல்வம்’.
இருப்பதை வைத்து நிறைவாக வாழாமல், நிறைவை தேடி...தேடி... வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது, என்ற மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ராம் சக்ரி, ஒரு சராசரி குடும்பத்தின் கனவுகள் மற்றும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை...
தமிழ் ஈழப் போராட்டம் மற்றும் போர்க் காலங்களில் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘நீளிரா’ ஒரு நீண்ட இரவில் நடக்கும் கதை என்றாலும், ஈழப் போரின் பின்னணி, அம்மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் மற்றும் சமாதானம் என்ற பெயரில் அம்மண்ணில் அடியெடுத்து வைத்த இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது.
விடிந்தால் திருமணம், சுற்றி பதற்றமான சூழல், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஒருவித பயத்தோடு இருந்தாலும், திருமண வீட்டார் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். இதற்கிடையே போராளிகளை தேடி இந்திய ராணுவம் அங்கு வருகிறது. மறுபுறம் அவர்கள் இருப்பதை அறிந்த போராளிகள் அவர்களை தாக்க தயாராகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்திய ராணுவப்படை திருமண வீட்டுக்குள் நுழைகின்றது.
ஒரு பக்கம் போராளிகள், மறுபக்கம் இந்திய ராணுவப்படை என போ...