சங்கருக்கான நீதி இந்த தீர்ப்பு மட்டுமல்ல சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு – கவுசல்யா
உடுமலை சங்கர் கொலை வழக்கில் அவரது மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்ன குமார் ஆகியோர் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு தொடர்பாக சங்கரின் மனைவி கவுசல்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
என் சங்கர் சிந்திய ரத்ததிற்கு நீதி கிடைக்க ஒன்னறை ஆண்டுகளாக காத்திருந்தேன். நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கை வீண்போ...









