வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

சங்கருக்கான நீதி இந்த தீர்ப்பு மட்டுமல்ல சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு – கவுசல்யா

சங்கருக்கான நீதி இந்த தீர்ப்பு மட்டுமல்ல சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு – கவுசல்யா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உடுமலை சங்கர் கொலை வழக்கில் அவரது மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்ன குமார் ஆகியோர் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு தொடர்பாக சங்கரின் மனைவி கவுசல்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- என் சங்கர் சிந்திய ரத்ததிற்கு நீதி கிடைக்க ஒன்னறை ஆண்டுகளாக காத்திருந்தேன். நீதித்துறை மீது வைத்திருந்த நம்பிக்கை வீண்போ...
டெல்லி, மும்பையில் விராட் கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு விழா

டெல்லி, மும்பையில் விராட் கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு விழா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். டெலிவி‌ஷன் விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் முதல் முறையாக இருவரும் சந்தித்தபோது காதல் ஏற்பட்டது. முதலில் மறைமுகமாக இருந்த இந்த காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது. 4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஓய்வு கேட்டு இருந்தார். இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெறும் என்று யூகங்கள் வெளியானது. ஆனால் எந்த தேதியில் திருமணம் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி- அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று நடந்தது. இந்து முறைப்படி இந்த திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெர...
பேரறிவாளனை விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

பேரறிவாளனை விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிகிச்சை காரணமாக அவர் சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்றப் பட இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்க...
கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடி

கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 குற்றவாளிகளுக்கு  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் (22) என்பவரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா (19) என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ்நிலையத்திற்கு சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் சங்கர் - கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பினார். இந்த கொலை குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலிப்படை மூலம் கொலை செய்ததாக கவுசல்யாவின் தந்...
புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் “ செயல் “

புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் “ செயல் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்   “ செயல் “  ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.   கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். 15 வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கும் படம் இது.                                                           படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..                                                                                                           வட சென்னையில் தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை, அங்கு மளிகை சாமான் வா...
சென்னையில் தயாரிப்பாளர் சங்க பொது குழு கூட்டம்  பாதியில் நிறுத்தப்பட்டது…!

சென்னையில் தயாரிப்பாளர் சங்க பொது குழு கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சென்னையில் தயாரிப்பாளர் சங்க பொது குழு கூட்டம் இன்று தொடங்கியது.  கூட்டத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சேரன் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. சினிமா வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று நடந்த சங்க பொது குழு கூட்டம் சில மணி நேரங்களில்  நிறுத்தப்பட்டது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சென்னை  கலைவாணர் அரங்கத்தில் இன்று நண்பகல் தொடங்கியது. அசோக் குமார் மரணம், கந்துவட்டி ஃபைனான்ஸ் முறை, தயாரிப்பாளர்கள் சங்க வைப்பு நிதி கணக்கு தாக்கல், கேபிள் டி.வி உரிமம், சேட்டிலைட் உரிம்ம், டிஜிட்டல் சினிமா ப்ரொஜக்‌ஷன் கட்டண குறைப்பு, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு எனப் பல விஷயங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்பட்ட நிலையில். எந்த ஒரு அலுவல்களும்  நடக்காமல் பொதுக்குழு நிறுத்தப்பட்டது. கடந...
‘2.0’ பட தாமதம் அமெரிக்க கிராபிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர முடிவு

‘2.0’ பட தாமதம் அமெரிக்க கிராபிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர முடிவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், முன்னோட்டம்
'2.0' படத்தின் தாமதத்திற்கு நிஜக்காரணம் என்ன? ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது ஜனவரி வெளியீடாக இருந்த இப்படம் தற்போது ஏப்ரல் வெளியீடாக மாறியுள்ளது. இதற்கு படத்தின் கிராபிக்ஸ் தாமதம் தான் காரணம் என தகவல்கள் வெளியாகின. உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து படக்குழுவினர் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம் '2.0' படத்தின் பிரதான காட்சிகள் கிராபிக்ஸை கொடுத்திருந்தோம். இதற்கான 90% பணமும் அளித்திருந்தோம். ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை. மேலும், அவர்கள் அளித்த பணிகளைப் பார்த்தபோது சுமார் 50% பணிகளைத்தான் முடித்திருந்தார்கள். இதனால் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தற...
நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக  பங்கேற்க்கும் 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்க விழா

நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்க்கும் 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்க விழா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை நடக்கவுள்ளது. 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் துவக்க விழாவில் நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த வருடத்தின் சிறந்த படத்திற்காகப் போட்டியிடும் 12 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. 8 தோட்டாக்கள் 2. அறம் 3. கடுகு 4. குரங்கு பொம்மை 5. மாநகரம் 6. மகளிர் மட்டும் 7. மனுசங்கடா 8. ஒரு கிடாயின் க...
கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன் –   புதுமுகம் சித்தார்த்தா சங்கர்

கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன் –   புதுமுகம் சித்தார்த்தா சங்கர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கட்டிப்பிடிக்க கத்துக்கொடுத்த ரம்யா நம்பீசன்    புதுமுகம் சித்தார்த்தா சங்கர் சமீபத்தில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் படம்  சத்யா. இந்த படத்தில் சிபி ராஜிற்கு வில்லனாகா வந்து மிரட்டல் கொடுக்கும் சித்தார்த்தா சங்கர் நடிப்புக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்.  இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் டாக்டர் படிப்பை பாதியில் விட்டு வந்திருக்கிறார். இந்த அனுபவம் குரித்து சித்தார் சங்கரிடம் கேட்டபோது.. நான் மலேசியாவில் பொறந்து வளர்ந்தவன். அப்பா வேலூர் அம்மா மலேசியா  அங்கேயே டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நடிக்க ஆசை ஆனால் அம்மா ரொம்பவும் கண்டிப்பாக படிப்புதன் முக்கியம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் பிடிவாதமாக நடிக்க வந்து விட்டேன். வந்ததும் நாசர் சரிடம் முறையாக நடிப்பை கத்துக்கிட்டேன். நான் போகும் ஜிம்முக்கு விஜய் ஆண்டனி வருவார். அவரிடம் வாய்ப்பு கேட்டு வைத்திருந்தேன். சைத்தான...
ஜெயம் ரவி நடிக்கும் மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர்

ஜெயம் ரவி நடிக்கும் மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. ‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயம் ரவி மகன் ஆரவ், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், மியூஸிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.  ...