வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

மீண்டும் தள்ளிப்போன ரஜினியின் ‘2.0’ ….?!

மீண்டும் தள்ளிப்போன ரஜினியின் ‘2.0’ ….?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.0.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போனது. ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தையொட்டி 2.0 திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால் ஓரிரு மாதங்கள் தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது. ...
பெங்களூரு ஜெயிலில் சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு

பெங்களூரு ஜெயிலில் சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவை  டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேச முடிவு செய்தார். இதற்காக பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரெண்டிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, இன்று காலை தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் இருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். பள்ளிகொண்டா, ஆம்பூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழி நெடுக அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெங்களூரு சென்ற டிடிவி தினகரன் இன்று பிற்பகலில் சசிகலாவை சந்தித்து பேசினார்.  அவருடன் மருத்துவர் வெங்கடேஷ், இளவரசியின் மகன் விவேக், மருமகள் கீர்த்தனா, மகள் ஷகிலா, மருமகன் ராஜராஜன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அவர்களுடன் புகழேந்தியின் வழக்கறிஞர் அசோகனு...
முன்ஜாமீன் கேட்டு பைனான்சியர் அன்புசெழியன் ஐகோர்ட்டில் மனு

முன்ஜாமீன் கேட்டு பைனான்சியர் அன்புசெழியன் ஐகோர்ட்டில் மனு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கந்துவட்டி கொடுமையால் திரைப்பட இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிக்குமாரின் நெருங்கிய உறவினருமான அசோக்குமார் கடந்த 21-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் ஜி.என்.அன்புசெழியன் தான் காரணம் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்குத் தூண்டியதாக மதுரை கீரைத்துரை மேலத்தோப்பைச் சேர்ந்த ஜி.என்.அன்புசெழியன்(வயது 50) மீது குற்றம் சாட்டி, அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் அன்புசெழியன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இந்த வழக்கில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. பி.அசோக்குமாருக்கும் எனக்கும் எந்தவித நேரடி தொடர்போ, மறைமுக தொடர்போ இல்லை. சசிக்குமார் ந...
அதிக தொகைக்கு விலைபோன விஷாலின் `இரும்புத்திரை’

அதிக தொகைக்கு விலைபோன விஷாலின் `இரும்புத்திரை’

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
`துப்பறிவாளன்' படத்தை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்துவரும் `இரும்புத்திரை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமை அதிக தொகைக்கு விலைபோயுள்ளதாகவும், அதனை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் கைப்பற்றி...
பைனான்சியர் அன்புச்செழியனை  ஏமாற்றினாரா சிவி.குமார்..?!

பைனான்சியர் அன்புச்செழியனை ஏமாற்றினாரா சிவி.குமார்..?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  நம்பிக்கை நாணயம் அற்றுப்போனதா தமிழ் திரையுலகம்...! பைனான்சியர் அன்புச்செழியனை ஏமாற்றினாரா சிவி.குமார்..?! இரு கடன்... ஒரு செட்டில்மெண்ட்... தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நேர்மையான நடவடிக்கைகள் ஒழிந்துபோய் ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்தி குறை சொல்லி அடுத்தவர் பணத்தை ஏமாற்றி பிரபலம் என்ற போர்வையில் ஒளிந்து கொள்ளும் அவலம் அதிகரித்து வருகிறது. சினிமா தொழில் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடந்து வந்த நிலை மாறி இப்போது நாக்கில் தேன் தடவி அந்த தேனில் விஷம் வைக்கும் அதிர்ச்சிகளும் அதிகரித்து வருகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்... பிரபல இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சசிக்குமார் மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் என்ற பைனான்சியரிடம் வாங்கிய கடனை திருப்பி தராத நிலையில் ‘பைனான்சியர் அன்புச்செழியன் மிக மோசமாக என்னை மிரட்டியதால் நான் தற்கொலை செய்கிறேன்’ என்று சசிக்குமாரி...
மக்கள் மனசுல யாரு என்ற மாபெரும்  கருத்துக்கணிப்பின் முடிவுகள்

மக்கள் மனசுல யாரு என்ற மாபெரும்  கருத்துக்கணிப்பின் முடிவுகள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
நியூஸ்7தமிழில் மக்கள் மனசுல யாரு என்ற மாபெரும்  கருத்துக்கணிப்பின் முடிவுகள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது .ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புள்ளியியல் வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி வயது, பாலினம், மதம், கல்வித்தகுதி மற்றும் தொழில் அல்லது பணி அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. நியூஸ்7 தமிழ் மற்றும் குமுதம் குழுமம் இணைந்து நடத்தும் “மக்கள் மனசுல யாரு” மாபெரும் கருத்துக்கணிப்புக்கான முடிவுகள் இந்தவாரம் 27, 28, 29, 30 ​ மற்றும் டிசம்பர் 1​  ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது....
சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா

சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் "திருட்டுப்பயலே 2". இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில்  ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார்.  நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....
ஆர்யா நடிப்பில் ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் ‘கஜினிகாந்த்’

ஆர்யா நடிப்பில் ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் ‘கஜினிகாந்த்’

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோகிரீன் பட நிறுவனம் மெகா பெருட்செலவில் தயாரிக்கும் படம் ‘கஜினிகாந்த்’ இதில் ஆர்யா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சயிஷா நடிக்கிறார். சந்தோஷ் இயக்கும் இந்த படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.  இப்படத்தை ஹர ஹர மஹா தேவகி, மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து    படங்களை இயக்கிய சந்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக “வனமகன்” சயிஷா நடிக்கிறார். மேலும் பாலமுரளி பாலு  இசையமைக்க, பல்லு அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை  கவனிக்க, கோபி ஆனந்த் கலைஇயக்கத்துக்கு  பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது....
வேட்டைக்காரனை ‘வாழைப்பழ’ காமெடியில்  ஏமாற்றிய ஞானமான சிங்கராஜாவும் மாயப்பூனையும்..!

வேட்டைக்காரனை ‘வாழைப்பழ’ காமெடியில் ஏமாற்றிய ஞானமான சிங்கராஜாவும் மாயப்பூனையும்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  தயாரிப்பாளர்: ஆக்ஷன் கதையெல்லாம் வேணாம்பா... த்ரில்லிங்கா பிராடு பன்ற கதை... கிளைமாக்ஸ்ல ஆடியன்சோட சேர்ந்து தியேட்டர்காரனும் ஷாக் ஆகனும்’ அப்படி ஏதாவது கதையிருந்தா இருந்தா சொல்லு வாய்ப்பு தேடுபவர்: சார் இது ஆக்ஷன் கதைன்னு சொல்ல முடியாது... ஆனா ஆக்ஷன் இருக்கும்சார்... த்ரில்லர் கதைன்னு சொல்ல முடியாது ஆனா த்ரில்லர் இருக்கும் சார்... கிளைமாக்ஸ் பயங்கர ஷாக்கா இருக்கும்சார்... தயாரிப்பாளர்: பில்டப் எல்லாம் போதும்பா... கதைய சொல்லு... நம்ம கதையோட ஹீரோ யார்னு கேட்டீங்கன்னா ஜல் ஜல்னு சத்தம் வரும் சலங்கைதான்... சார்... சிறுத்தை புலி பூனை சிங்கம், நரின்னு மிருகங்கள் வாழுற காடு தான் நம்ம படத்தோட லொகேஷன்.... ஒருநாள் சிங்கம் இரைதேட போகும்போது பெருசா ஒண்ணும் கிடைக்காம தவிச்சுது... இரைதேடப்போன சிங்கத்தை காணோம்னு அதோட குகையில குட்டி சிங்கங்களும், வாசல்ல பல நரிகளும் காத...
கோடங்கி சொல்லும்   11 கோடியில் உருவான  வாழைப்பழ கிளைமாக்ஸ்..!

கோடங்கி சொல்லும் 11 கோடியில் உருவான வாழைப்பழ கிளைமாக்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், முன்னோட்டம்
      கோடங்கி சொல்லும் 11 கோடியில் உருவான வாழைப்பழ கிளைமாக்ஸ்..! முக்கிய குறிப்பு: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையானது... நிஜமானதாக நீங்கள் நினைத்தால் கம்பெனி... பொறுப்பு இல்லை...   நல்ல கதை வேண்டுமே என்று ஆபீசில் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த தயாரிப்பாளருக்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்க... யெஸ் கம்மின்... உள்ளே வந்து நின்றான் ஒரு வாலிபன் கையில் ஒரு பைல்... பார்த்த உடனே ஏதோ கதை சொல்ல வந்தது தெரிந்து விட்டது... கதை சொல்ல வந்தவர்: சார் சதுரங்கவேட்டை டைப்ல ஒரு கதை தேடுறீங்கன்னு சொன்னாங்க... எங்கிட்ட ஒரு கதையிருக்கு சொல்லவா சார்... தயாரிப்பாளர்: ம்... இது ஒரு சினிமா சீட்டிங் கதை சார்... தயாரிப்பாளர்: யோவ்... சினிமாவே ஒரு சீட்டிங்தான்... அதுல என்னய்யா... சரி மேல சொல்லு... கதை சொல்ல வந்தவர்: சினிமாவையே தன் கட்டுப்பாட்டுல வ...