சென்னையில் தயாரிப்பாளர் சங்க பொது குழு கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது…!
சென்னையில் தயாரிப்பாளர் சங்க பொது குழு கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சேரன் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
சினிமா வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று நடந்த சங்க பொது குழு கூட்டம் சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நண்பகல் தொடங்கியது. அசோக் குமார் மரணம், கந்துவட்டி ஃபைனான்ஸ் முறை, தயாரிப்பாளர்கள் சங்க வைப்பு நிதி கணக்கு தாக்கல், கேபிள் டி.வி உரிமம், சேட்டிலைட் உரிம்ம், டிஜிட்டல் சினிமா ப்ரொஜக்ஷன் கட்டண குறைப்பு, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு எனப் பல விஷயங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்பட்ட நிலையில். எந்த ஒரு அலுவல்களும் நடக்காமல் பொதுக்குழு நிறுத்தப்பட்டது.
கடந...









