அவரை நான் அப்பாவாக கருதவில்லை; தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார்’: கவுசல்யா
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட உடுமலை இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா, தனது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார் கவுசல்யா. அவருடன் 'எவிடன்ஸ'அமைப்பின் நிறுவனர் கதிரும் இருந்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், "உங்கள் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மகளாக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?" எனக் கேட்டார்.
...








