HOME SLIDER
முதல் முறையாக கருணாநிதியை வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
முதல் முறையாக கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாநிதியிடம் உடல் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
ரொம்ப நாட்களாக நடந்து வரும் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.
நாளையோடு சரியாக ஓராண்டு முடியும் சாமானிய மக்களை ஏமாற்றிய மோடி அரசின் பண மதிப்பிழப்பு நாளை 8ம் தேதி திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் "கருப்பு தினம்" என போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த நாள்.
அதே போல அதே நாளில் ஆளும் பிஜேபி அந்த நாளை கருப்புப் பணம் ஒழிப்பு நாள் ஆக கொண்டாடப் போவதாக அறிவித்தது.
இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியை திடீரென பிரதமர் மோடி சந்தித்தது சரிந்து விழும் மக்கள் செல்வாக்கை மீட்டுக் கொள்ளவா...
திமுக அறிவித்த போராட்டம் பிசுபிசுக்குமா...
மஸ்தான் வித்தை எடுபடுமா...
- கோடங்கி...
மகள் திருமண வரவேற்பில் ரசிகர்களை மேடை ஏற்றி கவுரவித்த விக்ரம் ரசிகர்கள் நெகிழ்ச்சி
சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது.
புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில்அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு, ச ராமதாஸ், திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம் ஆர் கே பன்னீர் செல்வம், தி மு க வின் முன்னாள் அமை...
ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் கட் அவுட் களத்தில் நயன்தாரா – அறம் ரிலீஸ் யுக்தி
ஹீரோக்களை மிஞ்சும் விதத்தில் கட் அவுட்டில் இடம் பெற்ற நயன்தாரா - அறம் பட விளம்பர யுக்தி
பெண் சமத்துவம் என்பதை வெறும் பேச்சில் மட்டுமே கொண்டுள்ள பல துறைகள் இருக்கும் இக்காலத்தில், அதனை நடைமுறையிலும் செயலாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா துறை.
மிக வலுவான முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள 'அறம்' படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார். இது ஒரு சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படமாகும்.
இப்படத்தை தயாரித்துள்ள KJR ஸ்டுடியோஸ், பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை கையாளவுள்ளனர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக இப்படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் தமிழகமெங்கும் பல திரையரங்கங்களில் எழுப்பப்படவுள்ளன. '
' 'அறம்' படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. நயன்தாரா அவர்களின் பெரிய மார்க்கெட் வேல்யூவிற்கு ஈடான விளம்பர யுக்திகளை கையாள்வத...
புதுமுகங்களை வைத்து வெற்றி படம் கொடுத்தால் இயக்குனர் திறமை தெரியும் – சுசீந்திரன் பளீச்
புது முகங்களை வைத்து படம் இயக்கி வெற்றி அடையும் போதுதான் அந்த வெற்றி இயக்குநரை சேரும் - சுசீந்திரன்.
'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் சந்திப், விக்ராந்த் ஹீரோவாகவும். மெஹரின் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படம் 'நான் மகான் அல்ல', 'பாண்டியநாடு' போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துவுள்ளோம். படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.என்னுடன் எல்லா படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார்.சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். இந்த படத்தில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். மிகவும் ஆச்சரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி.வெண்ணிலா கபடி குழுவுக்கு பின் லட்சுமணனுடன் மீண்டும் இணையும் படம். இந்த படத்தின் கலை இயக்குநராக சேகர் பணியாற்றியுள்ளார். நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றி படமாக அமை...
நானும் ஒரு குழந்தைதான் என புகைப்பட கண்காட்சியை நடத்துகிறார் இயக்குனர் பா.ரஞ்சித்
இயக்குநர் பா_இரஞ்சித்தின் அடுத்தக்கட்ட நகர்வு.
இயக்குநர் பா.இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் கருத்துக்களைப் பேசுவதோடு நின்று விடாமல் களத்திலும் சமூக மாற்றத்திற்கான அவசியத்தை முன்னிறுத்தி பல ஒருங்கிணைப்புகளையும், சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “காலா” படத்தை எடுத்து வந்தாலும், இடையிடையே சமூகம் சார்ந்த தனது செயல்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்தவண்ணம் உள்ளார்.
அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் “நீலம் பண்பாட்டு மையம்” ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்துள்ள “நானும் ஒரு குழந்தை” என்னும் தலைப்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளார் பா.இரஞ்சித்.
புகைப்படக் கலைஞர் ம.பழனிகுமாரின் புகைப்...
கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் – கேரள முதல்வர் வலியுறுத்தல்
நடிகர் கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் : கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்
மகாத்மா காந்தி, பன்சாரி, தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷூக்கு என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பது இந்த தேசத்திற்கே தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர், அந்த பட்டியலில் வேறு பெயர்கள் இணையாமல் இருக்க இது போன்று மிரட்டல் விடுப்பவர்களை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார். மதத்தின் பெயரால் சமூகத்திலும், நாட்டிலும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையை கண்டிப்பதாக கூறியுள்ளார்.
...
அதிகாரிகளை அருவருப்பான கேலிச்சித்திரம் வரைந்ததால் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தோம் – நெல்லை காவல்துறை விளக்கம்
கார்ட்டூனிஸ்ட் பாலா சென்னையில் கைது செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அருண்சக்தி குமார் விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளார்.
நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், தான் வாங்கிய கடன் தொகையான 1.45 லட்சம் ரூபாய்க்கு 2.45 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய பின்னரும் கடன் தொகையைக் கேட்டு கந்துவட்டி கொடுத்தவர்கள் மிரட்டியதால் நெல்லை மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தார்.
பல முறை மனு அளித்தும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.காவல்துறையினர் கந்து வட்டிக் கும்பலுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்ததால் மனம் உடைந்த அவர் கடந்த மாதம் 23-ம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்தார். அவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்கொளுத்தி தற்கொலை செய்து க...
கட்சி ஆரம்பிக்க ரசிகர்கள் பணம் தருவார்கள் 7ம் தேதி அரசியல் கட்சிக்கான முன்னோட்ட ஒரு செயலி அறிமுகம் – பிறந்த நாள் விழாவில் கமல் பேச்சு
கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதில் உறுதியாக உள்ளேன் - நடிகர் கமல்
சென்னை, கேளம்பாக்கத்தில் பிறந்த நாள் மற்றும் நற்பணி மன்றத்தில், 38 வது ஆண்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
மக்களுக்கு உதவும் வள்ளல் தேசத்தை உருவாக்கும் நாடு இது. இங்கிருக்கும் கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டம் இல்லை .
கையேந்துபவன் நான்; தமிழ்நாட்டுக்காக ஏந்துகிறேன். தமிழக நலனுக்காக கையேந்துவதில் வெட்கம் இல்லை .
பணக்காரர்கள் வரியை சரியாக செலுத்தினாலே நாடு ஓரளவு சரியாகும்.
ஏதோ ஆர்வத்திற்காக பதவிக்காக பிரச்னைகள் பற்றி நான் பேசவில்லை.
சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறை திரும்பி செய்கிறோம்.
இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை பணக்காரர்கள் பற்றி தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமா? உறவுகள் செத்த பிறகு தான் புத்தி வருமா? வரும் முன் காக்க அனைவரும் முன் வர வேண்டும் .
அடக்குமு...
கொட்டும் மழையிலும் கன ஜோராக இறுதிகட்ட ஷூட்டிங்கில் விஷாலின் இரும்புத்திரை..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1960ல் வெளியான படம் இரும்புத்திரை.
சுமார் 57 ஆண்டுகளுக்கு பின் அதே பெயரில் விஷால் நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது இரும்புத்திரை.
இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன், காமெடிக்கு ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மித்ரன் இயக்கி வரும் இந்த படம் ஒரு அதிரடி கணிணி குற்றங்களை வெளிச்சம் போடும் கதை என கூறப்பட்டாலும் இதுவரை இல்லாத அளவுக்கு சமந்தா காமெடியாக நடித்திருக்கிறாராம்.
கொட்டும் மழையிலும் இரும்புத்திரை படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இரும்புத்திரை 2018 பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது. விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
...

