சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை.
ஆனால் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஓரணியில் இல்லாமல் தனியாக கூட்டணி போட்டதால் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தொடர்கிறது.
தமிழகத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் நின்று நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது: “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோடு மாநில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டிதிட்டது போல் மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியோடு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தால் பாஜக தோற்றுப் போயிருக்கும் .
எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறி இருந்தது பாஜகவுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது” என்றார்