வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

சந்திரபாபு நாயுடு மகனின் பாதுகாப்பை திரும்ப பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி..!

 

ஆந்திராவில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரம் காட்டி  வருகிறார்.

அந்த வகையில், சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது மக்களை சந்திப்பதற்காக கிருஷ்ணா நதிக்கரையோரம் சந்திரபாபு நாயுடு உத்தரவால் கட்டப்பட்ட சொகுசு வீடு மற்றும் அதன் அருகில் உள்ள மாநாடு கட்டிடத்தை இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முந்தினம் உத்தரவிட்டார்.

சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

அதோடு போலீசாருக்கு வார விடுமுறை, வயதானவர்களுக்கான ஓய்யூதிய தொகை உயர்வு என பல அதிரடிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1,175 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன