வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

லண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் – சுஹாசினி மகன்

 

 

லண்டனில் இருந்து திரும்பியதால் தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்ட மணிரத்னம் – சுஹாசினி மகன்!

இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த ஐந்து நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக் கொண்ட தனது மகனுடன் உரையாடுவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

அதில் தனது மகன் கடந்த 18ந் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

 

மேலும் நந்தன் கூறுகையில், தற்போது 5 நாட்களாக தான் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், மேலும் 9 நாட்கள் இதேபோல் தான் இருக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு இதுவரை எந்தவொரு தொற்று அறிகுறிகள் இல்லாத போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைபடுத்திக் கொண்ட செயல் பலராலும் பாராட்டப் படுகிறது.

785 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன