சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

மக்களை காக்கவே 144 தடை உத்தரவு – முதல்வர் பழனிச்சாமி

 

 

மக்களை காக்கவே 144 தடை உத்தரவு – முதல்வர் பழனிச்சாமி

உடலால் தனித்திருப்போம். உள்ளத்தால் இணைந்திருப்போம். ஓமந்தூரார் வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரானா சிறப்பு மருத்துவமனையை முதல்வர் பழனிச்சாமி பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது:

மக்களை காப்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு முதல் ஸ்டேஜ் அளவில் தான் உள்ளது. இரண்டு மூன்று நான்கு என அடுத்த கட்டங்களுக்கு போக விடாமல் தடுக்கவே தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

அத்தியாவசிய தேவை என்றால் மட்டும் வெளியில் வாருங்கள். மற்றபடி சும்மா சுற்றுகிறவர்களுக்கு 144 தடை கண்டிப்பாக பொறுந்தும். மக்களை பாதுக்கத்தான் இந்த நடவடிக்கைகள். பொதுமக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் 15 சிறப்பு படுக்கைவசதிகள் ஏற்படுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு முதல்வர் பழனிச்சாமி கூறினார்.

587 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன