
கொரானாவை கட்டுப்படுத்த மருந்து கொடுங்கள் – பிரதமர் மோடியிடம் கேட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்
உலகம் முழுதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும்
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமான முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வருகின்றனர் என்பதும், ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றுதல், சமூக விலகலை பின்பற்றுதல் ஆகியவற்றைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து தொலைபேசியில் பேசியுள்ளார். அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வரும் நிலையில் இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசியதாக தெரிகிறது.
மேலும் கொரோனாவை ஒழிக்க இருநாடுகளும் முழுபலத்தையும் காட்ட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வாஷிங்டனில் பேசிய டிரம்ப் கூறியதாவது : இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசினேன். கொரோனா சிகிச்சைகான ஹைட்ரோகிளோரின் மருந்தை அதிக அளவில் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
