அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற வெள்ளைக்கார போலீஸ்… வெடித்த வன்முறை!
அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபரை போலீஸ் சுட்டுக் கொன்றதால் பதற்றம் அதிகரிப்பு. பல இடங்களில் வன்முறை தொடங்கியது.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ந் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிராகவும் , அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களின் போது பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தற்போதும் அமெரிக்காவின் பல நகரங்களில் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த சூழலில் மேலும் ஒரு கருப்பின வாலிபரை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் அமெ...