ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு… ரேஷன்பொருட்கள் இலவசம் – முதல்வர் அறிவிப்பு

 

தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு… ரேஷன்பொருட்கள் இலவசம் – முதல்வர் அறிவிப்பு

மாநில முதலமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல். 30-ந்தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக அனைத்து அரிசி ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நாளை காலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.

532 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன