ஜோதிகா படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் ஜோதிகா நடித்து மார்ச் 28 ரிலீஸ் ஆக இருந்த படம் பொன்மகள் வந்தாள்.
கொரானா ஊரடங்கு காரணமாக பட ரிலீஸ் தள்ளிப் போனது.
இந்த சூழலில் இந்த படத்தை தியேட்டர்கள் திறந்து ரிலீஸ் செய்வதில் காலதாமதம் ஆகும் என்பதால் நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்தது.
அதற்காக பிரபல டிஜிட்டல் நிறுவனத்திடம் ரிலீஸ் செய்ய பேசப்பட்டது அந்த நிறுவனமும் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி கொண்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பட்ஜெட்டுக்கு மேல் ஒரு மடங்கு லாபம் கிடைத்துள்ளது.
ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருப்பதால் டிஜிட்டலில் படம் பார்ப்பது அதிகரித்திருப்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் இந்த முடிவு தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜோதிகாவின் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முன் டிஜிட்டலில் ரிலீஸ் செய்தால் அந்த பட தயாரிப்பாளரின் எந்த படத்தையும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என எதிர்ப்பு கிளம்பியது.
அதே நேரம், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இந்த டிஜிட்டல் ரிலீசுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.
அதோடு, ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு தொழில் பாதுகாப்பு இருக்க வேண்டும். தனது தயாரிப்பை லாபத்தோடு வியாபாரம் செய்ய ஒரு வாய்ப்பு வரும் போது அதை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை. ஆகவே பொன்மகள் வந்தால் படம் டிஜிட்டலில் ரிலீஸ் செய்வதற்கு எனது முழு ஆதரவும் உண்டு என கூறியுள்ளார்.
அதே நேரம் இப்போது உள்ள ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதற்கு தயக்கம் காட்டுவார்கள். சமூக இடைவெளி சிக்கல் இருக்கும். நோய்த்தொற்று பயம் இருக்கும் இதன் காரணமாக இப்போதைக்கு தியேட்டர் ரிலீஸ் கேள்விக்குறியே.
ஜோதிகாவின் படத்தைத் தொடர்ந்து பல பிரபலங்களின் படங்களும் டிஜிட்டலில் ரிலீஸ் ஆனாலும் ஆச்சர்யமில்லை.