200 ரூபாய் அனுப்பினால் ஜோடியாக டான்ஸ் ஆடலாம் – கொரானா நிதி திரட்டும் நடிகை
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா வெளிநாட்டு தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஸ்ரேயா சரண், கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார் ஸ்ரேயா.
இதன்படி 200 ரூபாய் கூகுள் பே மூலம் கொரானா வைரஸ் தடுப்பு நிதியாக அனுப்பினால், அப்படி பணம் அனுப்பி வைக்கும் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை தன்னுடன் டான்ஸ் ஆட வாய்ப்பு தருவதாக ஸ்ரேயா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
இப்படி திரட்டப்படும் நிதி
கொரானா வைரஸ் காரணமாக வேலையிழந்து பட்டினியாக இருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமாம்.
அதற்காக உதவும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த அமைப்பிற்கு ரூபாய் 200 நிதி உதவி செய்துவிட்டு அதன் ஸ்க்ரீன் ஷாட்டை இ-மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இவ்வாறு அனுப்பியவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் தான் நடனமாடுவது, யோகா செய்வது உள்ளிட்டவைகளை செய்ய இருப்பதாகவும் நடிகை ஸ்ரேயா சரண் அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஸ்ரேயா குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கு ஏராளமானவர்கள் 200 ரூபாய் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
இதே போல பாடகி சின்மயியும் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விட்டு அவருக்கு ஸ்கிரீன் ஷாட் அனுப்புகிறவர்களுக்கு பாட்டு பாடி அனுப்பி வைக்கிறார். ஜீ.வி.பிரகாஷும் இதே போல பணம் அனுப்பும் ரசிகர்களுக்கு பாட்டு பாடி அனுப்பி வைத்து நிதி திரட்டி வருகிறார்.