சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

வெளிப்படையாக அரசு இல்லாததால் கொரானா பரவல் அதிகரித்துள்ளது – கமல் குற்றச்சாட்டு

அரசு வெளிப்படையாக இல்லாத்தால் தான் கொரானா இப்படி பரவி உள்ளது என கமல்ஹாசன் குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனை திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எவ்வளவு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன எந்த தகவல் குறித்து கேள்வி எழுந்துள்ளன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்‘‘வெளிப்படையின்றி செயல்பட்டதால்தான் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.
905 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன