சனிக்கிழமை, மே 2
Shadow

பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு!

 

பலியான சீன வீரர்களின் உடலை கூட காட்டாமல் அஸ்தியை அனுப்பியதாம் சீன அரசு!

லடாக் பகுதியில் சீன அத்துமீறலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதோ மட்டுமில்லாமல் நமது வீரர்களின் உடல்களுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதே நேரம் இந்திய வீரர்கள் எதிர்த்தாக்குதலில் 43 சீன வீரர்கள் பலியானதாக உறுதியற்ற தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், சீன அரசு பலி எண்ணிக்கை எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் மரணத்தை கூட  உலக நாடுகளிடம் இருந்து மறைத்துள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் பலியான ராணுவ வீரர்களின் உடல்களை கூட சம்மந்தப்பட்ட உறவினர்கள், பெற்றோர்கள் என யாரையும் பார்க்க அனுமதிக்காமல். வெறும் அஸ்தியை மட்டுமே வீட்டிற்கு அனுப்பியுள்ளது.

உடலை கூட காட்டாமல் அஸ்தியை மட்டும் அனுப்பி வைத்த விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சீன கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஒரு சர்வாதிகார போக்கு அதிகம் உள்ளது என குற்றம் சாட்டுகிறார்கள் இணையவாசிகள்.

 

 

456 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன