வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

வங்கி கொள்ளையர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற அசாம் போலீஸ்!

வங்கி கொள்ளையர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற அசாம் போலீஸ்!

அசாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டம், போட்கான் கிராமத்தில் அலகாபாத் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் இன்று அதிகாலையில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து சந்கேமடைந்த போலீசார், செங்மாரி என்ற இடத்தில் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது கொள்ளையர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளைக் கும்பல் வங்கி லாக்கரை வெல்டிங் செய்து உடைப்பதற்காக வைத்திருந்த கேஸ் சிலிண்டர், ஆக்சிஜன், இரும்பு கம்பி, இரண்டு துப்பாக்கிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
வங்கிக் கொள்ளையை சரியான சமயத்தில் தடுத்ததுடன், கொள்ளையர்களை சுட்டுக்கொன்ற அசாம் காவல்துறையை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாராட்டினார்.
139 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன