ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி ஆதீக்கத்திற்கு எதிரானவர்கள் – முதல்வர் ஸ்டாலின் பளீச்

 

குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக ஊர்திக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும்,

அதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளதாக புகழாரம் சூட்டினார்.

செம்மொழி தகுதியை தமிழக்கு பெற்றுத் தந்தது, மெட்ராஸ் பெயரை சென்னை என மாற்றியது தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது என திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டார்.

தமிழ், தமிழர் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல என்று கூறிய முதலமைச்சர், ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஹிந்தி ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள் என குறிப்பிட்டார்.

 

எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்வது அவர்களது விருப்பத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும்.அவர்களது வெறுப்பை சார்ந்ததாக இருக்கக் கூடாது. ஒரே ஒரு மதம் தான் இருக்க வேண்டும் என்பதைப் போல, ஒரே ஒரு மொழியாகத்தான் இருக்க வேண்டும் அதுவும் இந்தி தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இந்தியை தவிர்த்து மற்ற மொழி பேசுபவர்களை இரண்டாம் தர மக்களாக நினைக்கிறார்கள். தமிழ் என்றால் தமிழர்கள் என்றால் ஏனோ கசக்கிறது. நாளை நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் திட்டமிட்டு தமிழகத்தின் அணிவகுப்பு அலங்கார வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் தரும் காரணம் ஏற்றுக்கொள்ளமுடியாது.

வீரமங்கை வேலுநாச்சியார் மானங்காத்த மருது சகோதரர்கள் மகாகவி பாரதியார் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி இவர்களை யார் என்று கேட்பதற்கு நீங்கள் யார்? பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதல் முதலாக குரல் எழுப்பியது தமிழ்நாடு. பிரிட்டிஷார் எழுதிய வரலாற்றினை எடுத்து படியுங்கள்.

வ.உ.சியின் பேச்சை கேட்டால் பிணம் கூட எழுந்துநிற்கும் என அங்கிலேயரே எழுதி உள்ளனர்.அவருக்கு இரட்டை ஆயுள் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதியால் எழுதிவைக்க பட்டுள்ளது.

ஆனால் இன்று வ.உ.சியை கப்பல் முதலாளி தானே என்று கேட்கிறார்கள். இவர்களை யார் என கேட்க நீங்கள் யார் என கேள்வி எழுப்பினார்.

409 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன