சனிக்கிழமை, மே 2
Shadow

”அடுத்த வாரம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும்” தப்பி வந்த மாணவர்களுக்கு உக்ரைன் பல்கலை மின்னஞ்சல் தகவல்!

 

கார்கிவ் தேசிய மெடிக்கல் கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகள் அடுத்த வாரம்  தொடங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளதாக

உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய நெல்லை மாணவர்   தெரிவித்துள்ளார். கார் கிவ் நகரிலிருந்து லிபியா வந்து சேர தமிழக அரசு அமைத்துள்ள குழு உதவி செய்ததாகவும் அங்கிருந்து,

இந்திய தூதரகம் மூலமாக டெல்லிக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ள மாணவர் ஆன்லைன் மூலம் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் வகுப்புகள் நடைபெற்ற வந்தது. தற்போது,  ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று  வருகிறது.

இதன் காரணமாக இந்திய அரசு  உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது.

இந்தியாவின் விமானப்படை விமானங்கள் மூலம் தாய்நாட்டிற்கு அவர்களை அழைத்து வரப்பட்டனர் .

அப்படி  அழைத்து வரப்பட்ட மாணவர்களின் மினஞ்சல் முகவரிக்கு உக்ரைன் நாட்டில் கார்கில் நகரில் உள்ள தேசிய மருத்துவ கல்லூரியில் இருந்து அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

போர் எப்போது முடியும் என்பதே ஹெரியாத நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கும்,

உக்ரைன் நாட்டின் மன உறுதி சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 

436 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன