வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

Tag: ukraine war

உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், உலகம், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதேபோல் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 10000 கருவிகள் அனுப்பப்பட்டது. இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்....
கீவ் புறநகரில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட உடல்கள்!

கீவ் புறநகரில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட உடல்கள்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. வான்வெளி, தரைவழி கடல்வழி என பலமுனைகளில் தனது தாக்குதலை உக்கிரமாக நடத்தி வருகிறது. இந்த போர் ஆரம்பித்து 6 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களை கைப்பற்ற ரஷியா கடுமையாக போராடி வருகிறது. ஆனால் உக்ரைன் படை வீரர்களும் அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என எதிர்த்து சண்டையிடுகின்றனர். இதனால் ரஷியா படைகளும் திணறி வருகிறது. கீவ் புறநகர் பகுதியான புச்சா நகரை ரஷியா படைகள் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதியில் ஆதிக்கம் செலுத்த ரஷியா முழு கவனம் செலுத்தி வருகிறது. போர் உச்சகட்டதை எட்டி உள்ள நிலையில் புச்சா நகரை மீண்டும் உக்ரைன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த நகரை விட்டு ரஷியா...
Ukraine war சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் – ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து

Ukraine war சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் – ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே தீவிரமாக போர் நடைபெற்று வரும் சூழலில், இந்த விவகாரத்தில்  சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோ கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலகநாடுகள் வலியுறுத்திய போதிலும், ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே, சமாதானத்தை ஏற்படுத்த பெலாரஸ் நாடு முயற்சி மேற்கொண்ட நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரை நடத்துகிறது. இவ்வாறு உக்ரைன் சேரும்பட்சத்தில் அது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது இந்த இரு நாடுகளுக்கும் இந்த...
படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை!

படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்கா எச்சரிக்கை!

HOME SLIDER, ukrain war, World News, அரசியல், உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே துருக்கியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் படைகளைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, கீவ் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் படைகள் உக்ரைனின் வேறு பகுதியில், தாக்குதலை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படும் என எச்சரித்துள்ளார். ரஷ்யாவின் அறிவிப்பால் கீவ் நகருக்கான அச்சுறுத்தல் முடிந்து விட்டது என கருத முடியாது எனவும் ஜான் கிர்பி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, பிரசல்சில் ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ள நேட்டோ, உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையில் அமைதிக்கான நேர்மறையான...
தியேட்டரில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் குண்டு தாக்குதல் 300 பேர் பலி!

தியேட்டரில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் குண்டு தாக்குதல் 300 பேர் பலி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தஞ்சம் அடைந்த திரையரங்கம் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 300 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி வருகிறது. ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. மரியுபோலில் 90 சதவிகித கட்டடங்கள் தாக்குதலில் உருக்குலைந்துள்ளன. அங்கு 3 லட்சம் பேர் மின்சாரம், குடி நீர் மற்றும் உணவு இன்றி சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை குறி வைத்து தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் மரியுபோல்...
UkRaine War- புதினின் தவறான முடிவால் ரஷ்யாவுக்கு பின்னடைவு!

UkRaine War- புதினின் தவறான முடிவால் ரஷ்யாவுக்கு பின்னடைவு!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில். இப்போரில் ரஷ்யா மெல்ல மெல்ல தோல்வியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. ஐரோப்பா  கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடு உக்ரைன். சுமார் 4 கோடி மக்கள்  தொகை கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைன் நாட்டு பொதுமக்களை காப்பாற்ற போவதாக கூறி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த மாதம் 24ஆம் தேதி போரை அறிவித்தார் புதின். 21ஆம் நூற்றாண்டில் ஒரு போரா? என உலக நாடுகள் அதிர்ச்சியான நிலையில், ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மடிந்துள்ளனர். அழகிய நகரங்கள் உருகுலைந்து சின்னாபின்னமாயுள்ளன. பார்த்து பார்த்து கட்டிய வானுயர்ந்த கட்டடங்கள் கான்கிரிட் குவியலாக காட்சியளிக்கின்றன. தடை விதிக்க...
ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, சீனா உள்பட 38 நாடுகள் புறக்கணித்தன!

ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா, சீனா உள்பட 38 நாடுகள் புறக்கணித்தன!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்துக்கு எதிராக ரஷியா, பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய 5 நாடுகள் வாக்களித்தன. சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் இந்த வரைவு தீர்மானத்தில் இல்லை என்பதால் இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய நீதிபதி எதிர்த்து கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா புறக்கணித்தது உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கபடுகிறது....
உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைனில் இருந்து 2300 குழந்தைகளை கடத்திய ரஷ்யா? – அமெரிக்கா குற்றச்சாட்டு

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது வாரமாக நீடித்து வருகிறது. பல்வேறு பகுதிகள் மீதும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்கி வருகிறது. இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லூகான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்து 389 குழந்தைகளை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றுள்ளதாகவும், இது கடத்தல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. மரியுபோல் நகரிலிருந்து படைகள் வெளியேற வேண்டும் என்ற ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் நிராகரித்தது. இதையடுத்து, அங்கு தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. அதேநேரம், மரியுபோல் நகரிலிருந்து ஒரு லட்சம் பேர் வெளியேற விரும்பினாலும், சரியான வழித்தடம் இல்லாததால், வெளியேற முடியவில்லை என்று துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் கோரிக்கை விடுத்துள்ளார். கெர்சன் நகரில் உணவு மற்றும் மருத்துவ விநியோகம் கிடைக்காமல் 3 லட்சம...
ukraine war: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல கூலிப்படை

ukraine war: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல கூலிப்படை

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல வேக்னர் என்னும் கூலிப்படையை  தங்கள் நாட்டுக்குள் ரஷ்ய அதிபர் புடின் அனுப்பியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றன. மரியுபோல் நகரை தொடர்ந்து ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு வருகின்றன.  அந்நகரின் 80 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன்  மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. முதல்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழ...
ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் உக்ரைன் நிலத்தடி ஆயுதக் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்ய ராணுவம்!

ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் உக்ரைன் நிலத்தடி ஆயுதக் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்ய ராணுவம்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷ்யா முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. MiG-31 போர் விமானங்கள் மூலம் செலுத்தப்படும் கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் படைத்தவை. ரஷ்ய ராணுவத்துடன் கூட்டு வைத்துள்ள உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், மரியுபோல் நகருக்குள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது...