
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், சின்னத்திரையில் தயாரிப்பாளருமாகவும் வலம் வருபவர் குட்டி பத்மினி.
இவர் சினிமாவை தாண்டி, அரசியலில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக பிஜேபி கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக குட்டி பத்மினி அறிவித்திருக்கிறார்
இதுகுறித்து குட்டி பத்மினி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் கடந்த 11 வருடமாக பிஜேபி கட்சியில் உறுப்பினராக இருந்து பணியாற்றி வருகிறேன்.
தற்போது பிஜேபி கட்சியில் இருந்து விலகுகிறேன். என்னுடைய தனிப்பட்ட வேலைகள் மும்பையில் அதிகம் இருப்பதால், அரசியலில் ஈடுபட தேவையான நேரம் கிடைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார்.
427 Views
