செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

செய்திகள்

சினிமா நட்சத்திரங்கள் அஜித்,விஜய், ரஜினி,கமல் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்!

சினிமா நட்சத்திரங்கள் அஜித்,விஜய், ரஜினி,கமல் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே  நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.  வாக்குப்பதிவு தொடங்கியதும், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். அதுபோல் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். தற்போது நடிகர் வி...
தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ஓட்டு போட்ட மு.க.ஸ்டாலின்!

தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ஓட்டு போட்ட மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ஓட்டு போட்ட மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவ...
தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்- பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போலீசார்!

தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்- பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போலீசார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்- பாதுகாப்பு பணியில் 1.58 லட்சம் போலீசார்! தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (6-ந் தேதி) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,585 பேர் ஆண்கள். 411 பேர் பெண்கள். சட்டமன்ற தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 528 சாவடிகள் பதட்டமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மேற்பார்வையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மையங்களு...
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் என்னென்ன? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி! சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். * வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும். * வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * தமிழகத்தில் 50% வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். * வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். * 21 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. * பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் உரிய ஆவணத்துடன் வாக்களிக்கலாம். * ...
மே.,வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி

மே.,வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வெற்றி பெறும் என கணிக்க கடவுளா மோடி? மம்தா கேள்வி மேற்கு வங்கத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில், அங்கு பா.ஜனதா வெற்றி பெறும் என கணிப்பதற்கு நீங்கள் கடவுளா? என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் வெளிப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றுமுன்தினம் மேற்கு வங்கத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அங்கு தேர்தலுக்குப்பின் பா.ஜனதா அரசு அமையும் என கூறினார். புதிய அரசு பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்பேன் எனவும், மாநிலத்தில் பிரதமர் கிசான் நிதி திட்டத்தை வெகு விரைவில் அமல்படுத்துமாறு அப்போது வலியுறுத்துவேன் என்றும் கூறியிருந்த...
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது – அட்டர்னி ஜெனரல் 

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது – அட்டர்னி ஜெனரல் 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது - அட்டர்னி ஜெனரல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த 23-ந் தேதி பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘பல்வேறு மாநிலங்களில் பெரும்பான்மை பலம் பெற்ற ஆட்சியையும் பா.ஜ.க. கவிழ்த்துள்ளது. மத்திய அரசு ஜனநாயக ரீதியில் இயங்கவில்லை. நாடாளுமன்றத்தில் பலம் பொருந்தியதாக பா.ஜ.க உள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டையும் கூட மத்திய அரசு பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது’ என குற்றம் சாட்டினார். இதில் மக்களை அச்சுறுத்த சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என ஸ்டாலின் தெரிவித்திருப்பது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனவும், அதன் சுதந்திரத்தன்மை அதி...
பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று!

பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று! இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அவ்வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். நடிகர் அக்சய் குமார், ராம்சேது என்கிற படத்தில் நடித்துவருகிறார். ராமஜென்ம பூமியை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை நிஜமான கதைக்களமான அயோத்தியில் படமாக்க இருக்கிறார்கள். சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் ...
கொரோனா அதிகரிப்பால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல்!

கொரோனா அதிகரிப்பால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல்!

HOME SLIDER, sports, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா அதிகரிப்பால் ஐ.பி.எல். போட்டிக்கு அச்சுறுத்தல்! 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே மும்பை வான்கடே மைதான ஊழியர் கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு 2 வீரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியை சேர்ந்த அக்‌ஷர்பட்டேல், பெங்களூர் அணியை சேர்ந்த படிக்கல் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷர்படேலுக்கு மு...
எவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது!

எவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
எவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது! உலகின் கடல் வழித்தடத்தின் முக்கிய பாதையான எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில், கடந்த மாதம் 23-ந் தேதி ‘எவர் கிவன்’ என்ற பிரமாண்ட சரக்கு கப்பல் குறுக்கே சிக்கியது. கால்வாயை கடந்து சென்றபோது பலத்த காற்றால் கப்பல் திசைமாறி இருபுறமும் தரை தட்டியது. ஆனால் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. ஏராளமான சரக்கு கப்பல்கள் நடுவழியில் காத்து கிடந்தன. கால்வாய் குறுக்கே சிக்கிய 2.20 லட்சம் டன் எடை கொண்ட எவர் கிவன் கப்பலை மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர். தரை தட்டிய பகுதியில் மணல்களை அகற்றியும், இழுவை கப்பல்கள் மூலமும் மீட்பு பணி நடந்தது. 6 நாட்களுக்கு பிறகு எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டது. பலத்த காற்று, ராட்சத அலை மற்றும் மீட்பு பணி காரணமாக கப்பல் மிதக்க தொடங்கியது. பின்னர் கப்பலை இழுவை கப...
இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்று முதல் 3 நாட்களுக்கு கடைகள் மூடல்- ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை! தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 6-ந்தேதி வரை 3 நாட்களுக்கு 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டிருக்கும். 'டாஸ்மாக்' கடைகள் மூடப்படும் தகவல் நேற்று அறிவிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததால் குடிமகன்கள் கூட்டம் ஒவ்வொரு மதுக்கடைகளிலும் அதிகம் காணப்பட்டது. துரைப்பாக்கம், கிண்டி, குன்றத்தூர், அம்பத்தூர், டி.பி.சத்திரம், புழல், மாதவரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, ஆவடி, திருமுல்லைவாயல் உள்பட பல இடங்களில் மதுக்கடைகளில் முண்டியடித்தபடி மதுபாட்டில்கள் வாங்கினார்கள். ஒருசில இடங்களில்தான் வரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கினார்கள...