புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின்

கொரானா தடுப்பு நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றுப் போய்விட்டார் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரானா தடுப்பு நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றுப் போய்விட்டார் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரானா சமூக பரவலாக மாறியதை மறைக்கும் எடப்பாடிபழனிச்சாமி வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்துவிட்டார் - ஸ்டாலின் குற்றச்சாட்டு. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரானாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் கொரானா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசின் அலட்சியத்தால் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கொரானா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரானா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது. கொரானா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும். சென்னையில் கொரானாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. அரசு உயர் அதி...
மனிதநேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்குங்கள் – ஸ்டாலின் அறிக்கை

மனிதநேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்குங்கள் – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மனிதநேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்குங்கள் - ஸ்டாலின் அறிக்கை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரானா நோய்த் தொற்றினால் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை அடியோடு தொலைத்துவிட்டுத் துயரத்தில் மூழ்கியிருக்கும் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தரப் பிரிவு மக்கள் ஆகியோருக்கு, நெருக்கடி மிகுந்த இந்தக் காலக்கட்டத்தில் கூட மனிதநேயத்துடன் உதவி செய்ய மத்திய பா.ஜ.க. அரசு மனமிரங்கவில்லை என்பது உள்ளபடியே மிகுந்த வேதனையளிக்கிறது. மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கிச் சீரழிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் ஒரு லட்சம் கோடி வரை நிவாரணம் வேண்டும் என்று கோரியுள்ள நிலையில் மாநில நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏற்ற...
நியாயமாக நடக்காத நீட் தேர்வு அவசியமா? ஸ்டாலின் கேள்வி

நியாயமாக நடக்காத நீட் தேர்வு அவசியமா? ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரானாவின் கோரத் தாண்டவத்தால் ஒட்டுமொத்தத் தேசமே பீதியில் முடங்கிக் கிடக்கும் நேரத்திலும், ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இது, மாணவ - மாணவியரைப் பற்றியோ, அவர்தம் பெற்றோர்களைப் பற்றியோ மத்திய அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. பல மாநிலங்களில், நாளுக்கு நாள் கொரானாவால் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை. இத்தேர்வு நியாயமாக நேர்மையாக நடைபெறவில்லை என்பதற்கு ஆள்மாறாட்ட வழக்குகள் உதாரணம். முறையற்ற ஒரு தேர்வை, கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மாநில அரசும், இந்தத் தேர்வைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்...
திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை… தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!

திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை… தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுக நடத்த திட்டமிட்ட அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை... சர்வாதிகார ஆட்சியா வைகோ காட்டம்! கொரானா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் முடக்கப்பட்ட நிலையில் 21 நாள் ஊரடங்கு முடியும் நிலையில் மீண்டும் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணிகளை தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் செய்ய தடை செய்த அரசுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் அரசு அறிவிக்கப்பட்டது தவறாக புரிந்து கொண்டதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிமுறைகள் படி நிவாரண உதவிகள் செய்யலாம் என அரசு விளக்கம் கொடுத்தது. இருந்த போதும் அரசின் நடவடிக்கைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த திமுக அழைப்பு விடுத்தது. இந்த கூட்டம் நா...
இந்த சூழலில்கூட சந்தர்ப்பவாத அரசியல் செய்து இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் – முதல்வர் பழனிச்சாமி காட்டமான பதில்

இந்த சூழலில்கூட சந்தர்ப்பவாத அரசியல் செய்து இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் – முதல்வர் பழனிச்சாமி காட்டமான பதில்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னலமற்று பணியாற்றுகிறவர்களை கொச்சைப்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் - முதல்வர் பழனிச்சாமி பதில் அறிக்கை கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு முதல்வர் பழனிச்சாமி பதில் அளித்து அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கொரானா வைரஸ் நோய்த் தொற்று முதன் முதலாக கேரளாவில் வந்தபோதே, அ.தி.மு.க. அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகின்றது. நோய்த் தொற்று சம்பந்தமாக நாள்தோறும் நடைபெறும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்கள் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி வெளியிடப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகள் த...
திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்… இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!

திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்… இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திமுகவில் மீண்டும் மூத்தவர்களே ராஜ்யசபை எம்பி ஆகிறார்கள்... இளைஞர் அணிக்கு வாய்ப்பு இல்லை! தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கடந்த சில நாட்களாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருந்தது. அதிமுக கூட்டணியில் எப்படியும் ஒரு எம்பி பதவியை பெற தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும், அதிமுக அதற்கு இணங்கவில்லை. திமுக கூட்டணியில் இந்த பிரச்சனையே இல்லை. இருந்த போதும் சீனியர்களை ஒதுக்கிவிட்டு இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார். ஏற்கனவே மாநிலங்களவை எம்பி இருந்து வரும் திருச்சி சிவா மற்றும் என் ஆர் இளங்கோ ஆகியோர்களின் ப...
அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தலைவர்கள் மரியாதை!

அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தலைவர்கள் மரியாதை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் மரியாதை! பேரறிஞரின் 51வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  உள்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளோடு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்....
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முக.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முக.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முக.ஸ்டாலின்* விக்கிரவாண்டி: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் திண்ணை பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்பதாலேயே நடத்தாமல் தவிக்கின்றனர் என ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்....
அசுரன் பரபரப்பு… முரசொலி இடம் பஞ்சமி இடம் என பச்சை பொய் சொல்லும் ராமதாஸ் அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் – ஸ்டாலின் ஆவேசம்

அசுரன் பரபரப்பு… முரசொலி இடம் பஞ்சமி இடம் என பச்சை பொய் சொல்லும் ராமதாஸ் அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் – ஸ்டாலின் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது வரும் சில படங்கள் திரையுலகை தாண்டி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும். அதற்கு பல உதாரணம் இருந்தாலும் சமீபத்திய பரபரப்புக்கு காரணம் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரித்த அசுரன் படம். இந்த படத்தில் பஞ்சமி நில மீட்பு குறித்து வெற்றிமாறன் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவு செய்திருந்தார். இடைத்தேர்தல் பிரசாரத்தின் இடையே திமுக தலைவர் ஸ்டாலின் அந்த அசுரன் படத்தை பார்த்து படக்குழுவை வாழ்த்தி இருந்தார். அப்போது பஞ்சமி நில மீட்பு குறித்த கருத்தை வரவேற்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்து ஒரு பதிவு போட பரபரப்பு அதிகமானது. அதில் திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமும் பஞ்சமி நிலம்தான் அதையும் உரியவர்களிடம் திருப்பினால் நல்லது என்று ராமதாஸ் பதிவு போட அதற்கு ஸ்டாலின் பதில் சவால் விட்டிருக்கிறார். அதில், "மருத்...
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி – பிறந்த நாளில் ஸ்டாலின் புகழாரம்

தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி – பிறந்த நாளில் ஸ்டாலின் புகழாரம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் வந்த முதல் பிறந்த நாள் என்பதால் தொண்டர்கள் பல இடங்களிலும் வழக்கத்தை விட உற்சாகமாக கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி! தலைவரே! உங்கள் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள். நீங்கள் இருந்து சாதி...