அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் மரியாதை!
பேரறிஞரின் 51வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளோடு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
395 Views