தமிழகத்தில் கொரானா சமூக பரவலாக மாறியதை மறைக்கும் எடப்பாடிபழனிச்சாமி வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்துவிட்டார் – ஸ்டாலின் குற்றச்சாட்டு.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரானாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் கொரானா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசின் அலட்சியத்தால் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது.
நாட்டிலேயே கொரானா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரானா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது.
கொரானா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும். சென்னையில் கொரானாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. அரசு உயர் அதிகாரிகளுக்கு இடையேயான பதவி போட்டியை தடுக்க வேண்டும். அமைச்சர்கள் இடையிலான குழு சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கொரானா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது.
கொரானாவை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் முதலமைச்சர் உள்ளார்.
அதோடு சில கேள்விகளையும் எழுப்பி உள்ளார்
1. சென்னையில் கொரானாவை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?
2. தமிழகத்தில் கொரானா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்றால் ஏன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
3. ஊரடங்கின் போது குழுவுக்கு மேல் குழு என அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் எங்கே?.
4. எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமாக ஆலோசிக்க அரசு ஏன் தயங்குகிறது?
5. பொருளாதார மீட்பு, வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய எப்போது அரசு ஆர்வம் காட்டும்?
என்னுடைய இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் என்கிறார் ஸ்டாலின்.