சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: திமுக

அடுத்து திமுக ஆட்சிதான் தேர்தல் பணிக்கு தயாராகுங்கள் – ஸ்டாலின் பேச்சு

அடுத்து திமுக ஆட்சிதான் தேர்தல் பணிக்கு தயாராகுங்கள் – ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. தொ.மு.ச. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:- மத்திய-மாநில அரசுகள் தொழிலாளர்களின் துரோக அரசுகளாக உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமே 2 அரசுகளும் செயல்படுகிறது. தொழிலாளர்களுக்காக பிரதமர் அறிவிக்கும் பல கோடி ரூபாய் திட்டங்கள் வாக்குறுதிகளாகவே உள்ளது. நானும் விவசாயிதான் என்று கூறும் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தவர். நீட் தேர்வு காரணமாக இறந்த மாணவர்களின் மரணம் தற்கொலை அல்ல. அது மத்திய-மாநில அரசுகள் நடத்திய கொலைகள். ஆனால், இந்த தற்கொலைக்கு காரணம் தி.மு.க.தான் என்று சட்டசபையில் ம...
நீட் தேர்வை தடுத்ததே திமுக தான் சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்!

நீட் தேர்வை தடுத்ததே திமுக தான் சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சினையாக காரணம் தி.மு.க. அரசுதான் என்று குற்றம் சாட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது என முதலமைச்சர் பழனிசாமி ஆவேசத்துடன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க. தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அறித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு, அதனை ஆதரித்தது அ.தி.மு.க. அரசு. மாணவர்கள் தற்கொலைக்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான் காரணமே தவிர, தி.மு.க. அல்ல. 2010-ல் நீட் தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவ...
பொதுக்குழு முடிந்ததும் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் உடன் புதிய நிர்வாகிகள் மலரஞ்சலி!

பொதுக்குழு முடிந்ததும் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் உடன் புதிய நிர்வாகிகள் மலரஞ்சலி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். துணை பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  ...
பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் – விபி துரைசாமி சர்ச்சை பேட்டி

பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் – விபி துரைசாமி சர்ச்சை பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக தலைமையில்தான் கூட்டணிக் கட்சிகள் தேர்தலை சந்திக்கும். தமிழகத்தில் திமுக vs அதிமுக என இருந்த நிலை திமுக vs பாஜக என மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அதிமுக தலைமையில் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்ட நிலையில் வி.பி.துரைசாமி கருத்து சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது....
இது இந்தியாவா? “இந்தி”-யாவா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

இது இந்தியாவா? “இந்தி”-யாவா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் @KanimozhiDMK வை பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!...
இந்தி தெரியாது என்றதால் கனிமொழி எம்.பி.யிடம் “நீங்கள் இந்தியரா?” என கேட்டு ஏர்ப்போர்ட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் அதிகாரி!

இந்தி தெரியாது என்றதால் கனிமொழி எம்.பி.யிடம் “நீங்கள் இந்தியரா?” என கேட்டு ஏர்ப்போர்ட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண் அதிகாரி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தி தெரியாது என்றதால் "நீங்கள் இந்தியரா?" என கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்டு சர்ச்சையை எழுப்பிய விமான நிலைய பெண் அதிகாரி! டெல்லி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி எம்.பி, இந்த விஷயத்தை பதிவிட்டு, “இன்று விமான நிலையத்தில் ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேசமுடியுமா என கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியரா?” என்று என்னிடம் கேட்டார். இந்தியராக இருப்பது என்பது இந்தி மொழி தெரிந்திருப்பதற்கு சமம் என்கிற நிலை எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ...
பாஜக கொள்கையை எதிர்த்த முதல்வர் பழனிச்சாமிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்!

பாஜக கொள்கையை எதிர்த்த முதல்வர் பழனிச்சாமிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்டாலின் மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "மொழிக்கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே கல்வி உரிமையை பறிப்பது என கடிதம் எழுதினோம். எதிர்க்கட்சிகளின் கடிதத்தின் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்," என்று கூறியுள்ளார். முன்னதாக நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது....
மோடி அரசின் புதிய கல்வி கொள்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

மோடி அரசின் புதிய கல்வி கொள்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில்  கருத்து மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டமாக உள்ளது. கல்வி கொள்கை குறித்து, பிரதமர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகிறார். கல்வி சிறந்த தமிழகத்தில், புதிய கல்வி கொள்கை என்ற மதயானை புகுந்து நாசம் செய்துவிடும். கல்வி கொள்கை விவகாரத்தில் அதிமுக மௌனம் காக்க‌க் கூடாது, அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை மோசமானது என 4 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து, நிராகரிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம்.    ...
பலாத்காரத்திற்கு பின் தங்கையை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய அண்ணன்களை திமுகவில் இருந்து நீக்கினார் ஸ்டாலின்!

பலாத்காரத்திற்கு பின் தங்கையை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய அண்ணன்களை திமுகவில் இருந்து நீக்கினார் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தங்கை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய அண்ணன்களை திமுகவில் இருந்து நீக்கினார் ஸ்டாலின்! செங்கல்பட்டு நைனார்குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் முறை வரும் தேவேந்திரன், புருஷோத்தமன் இருவரும் தங்கை சசிகலா குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்ந்து நடந்ததால் சசிகலா கடும் எதிர்ப்பு காட்டியதால் அவரை கழுத்தை நெறித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு "தற்கொலை" செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளனர். இந்த நிலையில் இந்த மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் தப்பி ஓடிவிட்டனார். இவர்களை ...