திமுக தலைவராகி பொன்விழா காணும் கலைஞர் நலம் பெறவேண்டும் – கருணாஸ் MLA அறிக்கை
முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர், திருவாடனை தொகுதி எம்.எல் ஏ. கருணாஸ் அறிக்கை
தனது இளம் வயது முதல் தமிழ் இனம், தமிழ் மொழி என நெஞ்சில் இலட்சிய உறுதியோடு அயராது உழைத்த தமிழக அரசியலின் முன்னோடி எங்கள் மரியாதைக்குரிய பெருமகன் கலைஞர் கருணாநிதி அவர்கள். பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். பாசத்தோடு ‘தம்பி’ என அண்ணா அவரை அழைக்கும் உரிமை பெற்றவர். எனக்கு பின் என் தம்பிதான் திமுகவை வழிநடத்துவான் என வெளிப்படையாக பொதுமேடைகளில் அண்ணா பேசும் அளவுக்கும் அவருக்கு நம்பிக்கையை உருவாக்கியவர் . அதுமட்டுமின்றி இன்றோ – நாளையே தமிழக அரசியல் வரலாற்றின் முதற் பெரும் புள்ளியின் தொடக்கப்புள்ளி கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாது.
திமுகவின் முதல் தலைவராக 1969ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பொறுப்பேற்றார் கருணாநிதி. எனவே திமுக தலைவராக 50ம் ஆண்டில் அவர் 27.7.2018 இன்று அடியெடுத...