பிரபல நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நடிப்பில் லிங்கன் ராஜாளி இயக்கத்தில் உருவாகியுள்ள " லாலி லாலி ஆராரோ " படத்தின் இசையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
ரஜினிகாந்த் வீட்டில் மிக எளிமையாக நடந்தது. பாடலை கேட்டு ரஜினி பாராட்டினார்.
வேதா’ படத்தை தயரித்த வாசுதேவ் பாஸ்கர் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இந்த படத்தில் இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக நடித்து அறிமுகமாக, வெண்பா கதாநாயகியாக நடிக்கிறர். இந்த படம் தயாரிப்பில் இருந்து வந்த நேரத்திலேயே இப்படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை கைபற்றியிருக்கிறது சன் டி.வி. நிறுவனம்!
இந்த தகவலை சென்னையில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் இப்பட இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்! வழக்கமாக பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கே சன் டிவி நிறுவனம் முன்னுரிமை கொடுக்கும். அப்படியிருக்கும்போது புதுமுகங்கள் நடித்த இந்த படத்தை சன் டி.வி.வாங்கியிருப்பது இப்படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. வி.கே.டி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.வேலு தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் ...
"பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் பட்டாபி என்ற அடையாளத்தை பெற்ற நான், தற்போது 8 தோட்டாக்கள் படம் மூலம் மூர்த்தி என்கின்ற புதிய அடையாளத்தை பெற்று இருக்கிறேன்" என்கிறார் எம் எஸ் பாஸ்கர்
ஒரு தரமான திரைப்படத்திற்கு பிரம்மாண்ட தயாரிப்பும், நட்சத்திர நடிகர் நடிகைகளும் அவசியம் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறது, சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் '8 தோட்டாக்கள்' திரைப்படம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு, எல்லா தரப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிக்கின்றன. 'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' - ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் '8 தோட்டாக்கள்' திரைப்படம், ரசிக...
ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி - அவரின் பிறந்த நாளுக்காக 'பலூன்' இல் பறந்து வந்த கேக்...
ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு கதையை தேர்வு செய்யும் சிறப்பம்சம் கொண்டவர், கார் பந்தய வீரரும், நடிகருமான ஜெய். இவர் தற்போது அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், தனது பிறந்த நாளை, நேற்று பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார்.
சினிஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் பலூன் படத்தை, '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பலூன் படத்தின் ஒட்டுமொத்த ...
"சினிமா என் குடுமபம் என்றால், திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என் குடும்பத்தினர்" என்று கூறுகிறர் விஜய் சேதுபதி
சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள் திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அத்தகைய பல திறமையான பல திரையுலக பிண்ணனி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம். தமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த திரையுலக பிண்ணனி கலைஞர்களை கௌரவ படுத்த, வருகின்ற மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட விழாவை 'உலகாயுதா' நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கிறார் இயக்குநர் எஸ் பி ஜனநாதன். தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்று வழங்க இருப்பவர் ...
லதா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில்
சமுத்திரகனி - சாம் ஜோன்ஸ் நடிக்கும்
“ஏமாலி”
லதா புரோடக்ஷன்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக M. லதா தயாரிக்க முகவரி, தொட்டி ஜெயா, நேபாலி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் V. Z . துரை “ஏமாலி” எனும் புதிய படத்தை இயக்குகிறார்.
எதார்த்த நடிகர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
“ஏமாலி” படத்தின் பூஜை இனிதே முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்கியுள்ளது.
...
இயக்குனர் சமுத்ரகனி அடுத்த படம் தொண்டன். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா பேசும் போது "சமுத்ரகனி மீது மக்கள் ஒரு தனி அடையாளம் வைத்திருக்கிறார்கள். சமீபத்திதில் அவனுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேரக்டரில் நடித்தான். அதை பார்த்து அவனை கண்டித்தேன். அதே போல அவன் உண்மையான தொண்டன் தான் சினிமாவுக்கான தொண்டன்" என்றார் பாலா.
அதோடு இன்னும் 2 ஆண்டுகளில் நடிகர் விக்ராந்த் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தை பிடிப்பான் என்றார் பாலா.
...
தயாரிப்பாளர் சஙகத்தலைவராக நடிகர் விஷால் கிருஷ்னா இன்று பதவி ஏற்றார். அவரோடு வெற்றி பெற்ற நிர்வாகிகளும் பதவி ஏற்றனர்.
நடிகர் ரஜினி வாழ்த்து கடிதம் அனுப்பினார். நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள் விழாவில் குவிந்தனர்.
விவசாயிகள் நலனுக்காக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு டிக்கெட் விலையில் தயாரிப்பாளர் பங்கில் இருந்து ஒரு ரூபாய் வழங்கபடுகிறது. அதாவது அறிவிப்பு வெளியாகும் நாள் முதல் தமிழகத்தில் திரையிடபபடும் அனைத்து திரைப்படம், அனைத்து காட்சி, அனைத்து தியேட்டர் டிக்கெட் விலையில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தரபட உள்ளது. ஒவ்வொரு மாதமும் விவசாயிகளுக்கு பல கோடி கிடைக்கும்என்று பதவி ஏற்பு விழாவில் நடிகர் விஷால் அறிவிப்பு.
...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான நம்ம அணி மாபெரும் வெற்றி பெற்றது.
விஷால் தலைவராக தேர்வு பெற்றார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பட்டியல்
தலைவர்
விஷால்
துணைத் தலைவர்கள்
கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ்
செயலாளர்
கே.இ. ஞானவேல்ராஜா
கதிரேசன்
பொருளாளர்
எஸ்.ஆர்.பிரபு
21 செயற் குழு உறுப்பினர்கள்
சுந்தர் .சி
பார்த்திபன்
பாண்டிராஜ்
ஆர்.வி. உதயகுமார்
மன்சூர் அலிகான்
எஸ்.எஸ். துரைராஜ்
ஆர்.கே. சுரேஷ்
ஆர்யா
எஸ். ராமச்சந்திரன்
ஜெமினி ராகவா
அபினேஷ் இளங்கோவன்
எ.எல். உதயா
எம். கஃபார்
பிரவீன்காந்த்
மனோஜ்குமார்
பி.எல். தேனப்பன்
எஸ்.வி. தங்கராஜ்
கே. பாலு
எம்.எஸ். அன்பு
எஸ்.எஸ். குமரன்
டி.ஜி. தியாகராஜன்
...