சனிக்கிழமை, நவம்பர் 1
Shadow

Tag: Mk Stalin

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் – மு.க.ஸ்டாலின்

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics
மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம் - மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில்  கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முக ஸ்டாலின் வெற்றி பெற்றார் நேற்று நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றி...
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து!

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து!

HOME SLIDER, NEWS, politics
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து! தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில், இருந்து வருகிற நிலையில், தற்போது திமுக 155 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், ராகுல் காந்தி தனது டுவீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். உங்கள் தலைமையின் கீழ் மக்களின் நம்பிக்கையை நாங்கள் பூர்த்தி செய்வோம். உங்களுக்கு எனது வாழ்த்துகள்'' எனக் கூறியுள்ளார் https://twitter.com/RahulGandhi/status/13...
தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்!

தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், முன்னோட்டம்
தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்! விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொண்டார். காலையில் பிரசார பாடல் ஒலிப்பேழையை வெளியிட்ட அவர் மாலையில் திருக்கழுகுன்றம், கேளம்பாக்கம், திருப்போரூர் (பொதுக்கூட்டம்) ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். இன்று (செவ்வாய்கிழமை) மாலை பவுஞ்சூர், செய்யூர், சித்தாமூர் கூட்டுச்சாலை, சூனாம்பேடு ஆகிய இடங்களில் திருமாவளவன் பேசுகிறார். இரவு 7 மணிக்கு கடப்பாக்கம், கல்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை (24-ந் தேதி) சென்னையில் 6 தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார். மாலை 3 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 4 மணிக்கு திரு.வி.க. நகர், 5 மணிக்கு எழும...
போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் – CN இராமமூர்த்தி அறிக்கை

போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் – CN இராமமூர்த்தி அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என்.இராமமூர்த்தி அறிக்கை வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவருமான சமூக போராளி சி.என்.இராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழகத்தில் சமூக நீதியின் பெயரால் பல போலிகள் உலா வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் மட்டுமே சமூக நீதி பேசுவதும், சமத்துவம் பேசுவதும், சமுதாய மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் அரசியல் வியாபாரிகளின் முகத்திரையை இந்த தேர்தலில் கிழித்து எறிய வேண்டும். இதற்கான சரியான தலைமையை தமிழக மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும். தமிழக்த்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக அரசுதான் ஆட்சியில் இருந்தது. இப்போது தேர...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார். இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் தொடர்பாக நேற்று முன்தினம் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற பிரசார இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் பதிவிட்டுள்ளனர். நாளை (புதன்கிழமை) முதல் 10 நாட்கள் தி.மு.க.வை சேர்ந்த 1,600 நிர்வாகிகள், 16 ஆயிரம் கிராமங்களில், கிராம சபை கூட்டத்தை நடத்த உள்ளனர். அதில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட...
விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்- மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்- மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நிறைவு பெற்றது. முன்னதாக பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் அனுமதியில்லாமல் தடையை மீறி நடைபெறுகிறது. தமிழக அரசு என்ன வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ள நாங்க தயாராக உள்ளோம். சிறைக்கு போகும் ஆர்வத்துடன் போராட்டத்தை நடத்தினேன்.  “விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. 1957ல் கருணாநிதியின் முதல் சட்டமன்ற பேச்சே விவசாயிகள் பற்றித்தான்; நான் அவருடைய மகன். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார். யாரை பாதுகாக்க வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். போராடும் விவசாயிகளை அந்நியக் கைக்கூலிகள், தீவிரவாதிகள் என மத்திய...
இணையத்தில் வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் படங்கள்!

இணையத்தில் வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் படங்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.   மு.க.ஸ்டாலின் வாரத்தில் மூன்று நாட்கள் காலை நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் சைக்கிளில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.     மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.  ...
கொரானா தடுப்பு நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றுப் போய்விட்டார் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரானா தடுப்பு நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றுப் போய்விட்டார் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரானா சமூக பரவலாக மாறியதை மறைக்கும் எடப்பாடிபழனிச்சாமி வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்துவிட்டார் - ஸ்டாலின் குற்றச்சாட்டு. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரானாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் கொரானா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசின் அலட்சியத்தால் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கொரானா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரானா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது. கொரானா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும். சென்னையில் கொரானாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. அரசு உயர் அதி...