மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..!
மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..!
தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான பருவமழை மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே மும்பையில் தர்பார் ஷூட்டிங் முடிந்து பிரேக் விட இருக்கிறார்கள்.
சில நாட்கள் பிரேக் விட்ட பின் மீண்டும் 3ம் கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடக்க இருக்கிறதாம். டில்லியில் 10 நாட்கள் படம் பிடிக்க திட்டம்.
டில்லி பகுதி காட்சிகள் முடிந்ததும் மீண்டும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி முடிய உள்ளது.
மும்பையில் யோகிபாபு தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்து விட்டதாம். நயன்தாராவின் காட்சிகளும் முடிந்து விட்டதாம். ரஜினி தொடர்பான காட்சிகள் படுவேகமாக படமாக்கப்பட்டு வருகிறது....