பத்திரிகை செய்தி
தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைக்கும் கோரிக்கை...
தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்து தமிழக அரசியலில் 18 ஆண்டு காலமும் சிறப்பாக செயல்பட்டவரும், தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை உறுப்பினராகவும், ஒரு முறை எதிர் கட்சி தலைவராகவும், கேப்டன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கபட்டவருமான திரு.விஜயகாந்த் அவர்கள் நேற்று(28 டிசம்பர் 2023) உடல் நலமின்றி காலமானார்.
அவர் மறைவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந் நிலையில் தமிழ்நாடு அரசுக்கு எங்கள் சங்கம் சார்பில் முக்கியமான 3
கோரிக்கைகள் கீழ் வருமாறு வைக்கிறோம்:
1. மறைந்த திரு.'கேப்டன்' விஜயகா...
தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது.
2013, 2014, 2017, 2019-ம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, கடந்த 9 ஆண்டுகளாக அரசுப்பணிக்காக காத்து கிடக்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததாகவும், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணி,
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இ...
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜைகளை செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள கோ சாலைக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபட்டார். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது என்பது ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை காட்டுகிறது. தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும், அ.தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி....
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது- தேமுதிக!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது.
* தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
* ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது....
பிரேமலதாவை ஆதரித்து விருத்தாசலத்தில் நாளை விஜயகாந்த் பிரசாரம்!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குன்றிய நிலையிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய முடியாத நிலையிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அவர் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னை உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்த் கைகளை மட்டும் காட்டி வாக்கு சேகரித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று முதல் 3 நாட்கள் மீண்டும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இது தொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
இன்று மாலை 5 மணிக்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்யும் அவர் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகில் வாக்காளர்களை சந்திக்கிறார்.
6 மணிக்கு தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழவாசல் பகுதியிலும், 8 மணிக்கு- பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியிலும் அவர் ...
Vijayakanth to be discharged soon from hospital
Actor and DMDK chief Vijayakanth who was admitted in a private hospital after testing positive for corona, is reportedly stable and might be discharged soon.
A hospital bulletin said, ' Vijayakanth is tested negative for corona. He is doing good. He is under medical observation and may be discharged soon'.
Meanwhile reports say that Premalatga Vijayakanth was tested positive for corona and was admitted in hospital.
எதற்கும் மனம் தளராத தொண்டர்கள் என் பக்கம் இருக்கும் வரை எப்போதும் வெற்றிதான் - விஜயகாந்த்
தே.மு.தி.க.வின் 20-வது ஆண்டு கொடி நாளையொட்டி, சென்னை உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் 118 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் நாளை(புதன்கிழமை) கட்சிக் கொடியை ஏற்றுகிறார். இதையொட்டி கட்சி தொண்டர்களை விஜயகாந்த் வெகுவாக பாராட்டி உள்ளார்.
இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி தொண்டர்களுக்கு எழுதும் கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2000-ம் ஆண்டு நம் ரசிகர் மன்றத்திற்கு கொடி வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று 12-02-2000 அன்று சிவப்பு, மஞ்சள், கருப்பு, என்ற மூவர்ணத்துடன் நீலநிறத்தில் ஜோதியை கையில் ஏந்திய நம் கொடியினை அறிமுகப்படுத்தினோம்.
கொடியை அறிமுகப்படுத்தியவுடன் பட்டி, தொட்டி எங்கும் நம் கொடி பட்...