சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.
உதய சூரியன் சின்னத்தில் கறுப்பு சிவப்பு கொடியுடன் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமர்ந்திருப்போது போல கேக் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த கேக்கை வெட்டி பிறந்தநாளை மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். அப்போது, அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரிசன் உடனிருந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதைத் தவிர்த்து வந்தார். தொண்டர்களை சந்தித்தும் அவர் வாழ்த்து பெறாமல் இருந்தார்.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போது பதவியேற்பு விழாவை எளிமையான முறையில் ஸ்டாலின் நடத்தினர்.
இந்நிலையில், ஆண்டு முதலமைச்சராக அரியனையில் அமர்ந்து தனது 69வது பிறந்தநாளை கொண்டாட இரு...
அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு நாட்டின் 37 கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு.
நாடு முழுவதும் உள்ள சமூகநீதி கொள்கையை முன்னெடுத்துச் செல்ல அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கவுள்ளதாக ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் கடிதம்.
நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர், பட்டியிலின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களை பாதுகாக்கவே இந்த கூட்டமைப்பு - ஸ்டாலின்.
பாஜக அல்லாத தேசிய கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு.
சமத்துவம், சுய மரியாதை, சமூகநீதியில் நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றிணைந்தால்ஒன்றிணைந்தால்தான் பிரிவினை, மதவாதத்தை எதிர்த்து போராட முடியும் - ஸ்டாலின்.
பன்முகத்தன்மை கொண்ட நமது ஒன்றியம் பிரிவினை, மத மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது - ஸ்டாலின்.
சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந...
மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ஆர்.என்.ரவி சென்றபொழுது, அங்கு ‘வாழ்க திராவிடம், திராவிட நாடு வாழ்க’ என்ற பாடல் பாடப்பட்டது.
மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப் படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மரியாதை செலுத்தியிருந்தார்.
இதற்காக நிகழ்விடத்திற்கு அவர் காரிலிருந்து இறங்கி சென்ற பொழுது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினர் மற்றும் பள்ளி மாணவிகள் பாடலைப் பாடினர்
முதலமைச்சர் ஸ்டாலின் வரும்பொழுது `மகாத்மா காந்தி வாழ்க; பாரத நாடு வாழ்க’ என்ற பாடல் ஒலிபரப்பானது. ஆளுநர் வருகை தரும் போது திராவிட நாடு பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
&nb...
டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் - முதல்வர் ஸ்டாலின்
குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை,
நிபுணர் குழுதான் முடிவு செய்தது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.
ஆனால், அலங்கார ஊர்தி தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறினர்.
இந்ந...
இங்கிலாந்தில் தமிழக அரசின் சார்பில் பென்னிகுவிக் சிலை அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களுக்கு அவருடைய சொந்த நாட்டில் சொந்த ஊரில் சிலை வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணை முல்லைப் பெரியாறு அணை என்பதும்,
இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது என்பதும், இந்த அணை கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது என்றாலும் தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையை பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணை கடந்த 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கட்டப்பட்ட போது மேஜர் ஜான் ...
நாவலரை மறக்காத நல்லவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாவலர் என்று அன்போடு அழைக்கப்படும் இரா.நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 – சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கனாபுரத்தில், 11-7-1920 ஆம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் என்னும் மகன் உள்ளார். இவரது மருமகள் கல்யாணி மதிவாணன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். இவருக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்) என்னும் பெயரனும், சொப்னா மதிவாணன் என்னும் பெயர்த்தியும் உள்ளனர்.
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து, தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றவர். அங்கு இவரோடு பயின்றவர் க.அன்பழகன்.
கல...