கனடாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இயக்குனர் A.வெங்கடேஷ்ன் "நேத்ரா"
22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’.
இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார். மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ். தயாரிப்பு – பர.ராஜசிங்கம், ஏ.வெங்கடேஷ்.
லைன் புரொட்யூசர் - குமரவேல் பாண்டியன்.
ஏ.வெங்கடேஷின் படம் என்றாலே அது கமர்ஷியல் ஹிட்டுதான். தயாரிப்பாளர்களை மகிழ்வித்து மகிழும் இயக்குநர்களை கோடம்பாக்கத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த வரிசையில் A.வெங்கடேஷ்...
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்தப் படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, குளோபல் இன்போடெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களை கவராமல் பெரும் தோல்விய சந்தித்து. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார்.இந்நிலையில், இதுகுறித்து நேற்று (நவம்பர் 30) நிருபர்களிடம் பேசிய அவர், “அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்துக்கு சிம்புவை ஒப்பந்தம் செய்தபோது 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். ஆனால் 27 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்தார். ஒவ்வொரு நாளும் 5 நிமிடம், 10 நிமிடம் மட்டுமே நடித்தார். இதனால் நிறைய காட்சிகளில் அவருக்குப் பதிலாக டூப் நடிகரைப் பயன்படுத்திப் படமாக்கினோம். பாதிப் படம் முடிந்த நிலையில் ...
ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ்இசையமைத்திருக்கும் இப்படத்தின்இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் மன்னு,திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே ராமன், இயக்குநர் ராஜ்பாபு, இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ், ஒளிபபதிவாளர் விஜய் உலகநாத், படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா, நடிகர்கள் நகுல், வெங்கட், ஆஞ்சல், சந்திரிகா ரவி, யமுனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
படத்தின் இயக்குநர் ராஜ்பாபு பேசுகையில்,‘ நான் மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறேன். திலீப், பிருத்விராஜ், ஜெயராம் போன்...
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் 'சர்வம் தாளமயம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
'அடங்காதே', '4ஜி', 'ஐங்கரன்', 'குப்பத்து ராஜா', '100% காதல்', 'நாச்சியார்' ஆகிய படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
'மின்சார கனவு' மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்து வருகிறார்.
9 பாடல்கள் உள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் - ஜி.வி.பிரகாஷ் இருவருமே உறவினர்கள் என்றாலும் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ...
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை ஜனவரியில் வெளியிடுவார் என, ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் தெரிவித்தார்.
தருமபுரியில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள, நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ் கெய்க்வாட் இன்று (புதன்கிழமை) தருமபுரி வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், "தன் ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரின் அன்புக்கும் உரியவராக நடிகர் ரஜினிகாந்த் உள்ளார். அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக நல்லதே செய்வார். டிசம்பர் மாதத்தில் அவரது பிறந்த நாளில் புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்பில்லை. ஆனால், ஜனவரியில் வெளியிடலாம். ரஜினி அரசியலுக்கு வந்தபின் தமிழக மக்கள் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ரஜினியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போட்டோ ஷூட் நிகழ்ச்சி மீண்டும் ஜனவரியில் நட...
அசோக்குமார் தற்கொலை வழக்கில், இயக்குநர், நடிகர் சசிகுமாருடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல் ராஜா, கந்து வட்டி குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார்
விசாரணை தொடர்பாக தயாரிப்பாளர் சங்க செயலாளர் என்ற முறையில் விளக்கமளிக்க வந்தேன். அசோக்குமார் மரணம் தொடர்பாக விளக்கமளித்தோம், அடுத்தகட்ட விசாரணைக்கு நாளையும் வரவுள்ளோம்
அசோக்குமாரையும் அவரது குடும்பத்தினையும் தவறாக பேசியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர்.காலத்திலிருந்து பைனான்சியர்கள் உள்ளனர் ஆனால் வசூலிக்கும் முறையில் தான் தவறு உள்ளது.
வருகின்ற 30-ம்தேதி தயாரிப்பாளர் சங்ககூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் தயாரிப்பாளர்களிடம் கந்து வட்டி தொடர்பாக கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளோம்.” இவ்வாறு ஞ...
விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் எழில் இயக்குகிறார்.
இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'யோகி' பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் - எழில் இணையும் இரண்டாவது படம் இது. பெயரிடப்படாத இப்படத்தை துஷ்யந்த் தயாரிக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார். முருகன் கதை எழுத ஜோதி அருணாச்சலம் வசனம் எழுத உள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகும் 12-வது படம் இது என்பது கவனிக்கத்தக்கது.
இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது....
சென்னை அண்ணாசாலையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று போராட்டத்தில் செவிலியர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சர் விஜய பாஸ்கரன் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அதில் பங்கேற்ற செவிலியர்கள் தெரிவித்தனர்.
மன நிறைவுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டு, பணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
மற்றொரு தரப்பு செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசாணை 191-ஐ வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் உண்ணாவிரதத்துடன் போராட்டம் நடத்துவத...
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாகிறது.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே நல்லவரவெற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் சிங்கள் வரும் டிசம்பர் 11-ம் வெளியாக இருப்பதாக இசையமைப்பாளர் இமான் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
...