சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

Author: Kodanki

காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஸ்ருதிஹாசனுக்கும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலுக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. இருவரும் ஒன்றாக ஒருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்நிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் தந்தை கமல்ஹாசனுக்கு மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, சமீபத்தில் தாய் சரிகாவுக்கும் தனது காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். அதேபோல் ஆதவ் கண்ணாதாசனின் திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தனது காதலருடன் நெருக்கமாக கட்டி...
2 ஜி வழக்கின் தீர்ப்பு  சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்: ஆ.ராசா

2 ஜி வழக்கின் தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்: ஆ.ராசா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2 ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு உருவானது. அதன் பின்னர்ஆ. ராசா கோவில்பாளையம் வழியாக காரில் அன்னூர் சென்றார். கோவில்பாளையத்தில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசும் போது, 2 ஜி வழக்கில் நான் குற்றவாளி இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஊழல் இல்லை என நிரூபணமாகி இருக்கிறது. நீதி வென்றுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மக்கள் உண்மை தன்மையை புரிந்துள்ளனர் என பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, 2 ஜி வழக்கின் தீர்ப்பை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதனால் தான் பிரமாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்....
புறப்படும்போது திடீர் கோளாறு – லக்னோ விமான நிலைய ஓடுபாதையில் சிக்கிகொண்ட சவுதி விமானம்

புறப்படும்போது திடீர் கோளாறு – லக்னோ விமான நிலைய ஓடுபாதையில் சிக்கிகொண்ட சவுதி விமானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
லக்னோவில் இருந்து சவுதி அரேபியா நாட்டு விமானம் இன்று மாலை புறப்பட்டு செல்லும்போது ஏற்பட்ட திடீர் கோளாறினால் ஓடுபாதையில் ஸ்தம்பித்து நின்றது. இதனால், 9 விமானங்களின் வருகை - புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. சவுதி அரேபியா நாட்டுக்கு சொந்தமான சவுதி ஏர்லைன்ஸ் விமானம் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து ரியாத் நகருக்கு புறப்பட்டு சென்றது. ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து சென்று உயரக் கிளம்பும் முன் விமானி திடீரென்று ‘பிரேக்’ போட்டார். இதனால், விமானத்தின் மூக்கு பகுதியில் உள்ள முன் சக்கரம் ஸ்தம்பித்தது. அந்த விமானம் ஓடுபாதையின் குறுக்கே நின்றது. இந்த சம்பவத்தினால் விமானத்தில் இருந்த சுமார் 300 பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. எனினும், ஓடுபாதையின் குறுக்கே சவுதி விமானம் நின்றதால் லக்னோவில் தரையிறங்க வேண்டிய 6 விமானங்கள் டெல...
ஜெ., மரணம்: தினகரன், கிருஷ்ண பிரியா, பூங்குன்றன் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

ஜெ., மரணம்: தினகரன், கிருஷ்ண பிரியா, பூங்குன்றன் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் இருந்த வீடியோவை, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கடந்த 20–ந் தேதி வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகார் அடிப்படையில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தது. விசாரணை ஆணையத்தை அவமதிக்கும் விதமாக வெற்றிவேல் வீடியோ வெளியிட்டதாக, நீதிபதி ஆறுமுகசாமியின் செயலாளர் பன்னீர்செல்வம் புகார் தெரிவித்தார். தேர்தலுக்கு ஒருநாள் முன்பு, வீடியோவை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி, பொது அமைதிக்க...
ஸ்டாலின் தலைமை இருக்கும் வரை தி.மு.க.வுக்கு வெற்றி இல்லை: மு.க அழகிரி

ஸ்டாலின் தலைமை இருக்கும் வரை தி.மு.க.வுக்கு வெற்றி இல்லை: மு.க அழகிரி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகரில் தி.மு.க தோற்றது, தி.மு.க.வின் செயல்பாடு, பணப்பட்டுவாடா, தினகரன் வெற்றி என பல்வேறு விஷயங்கள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். கருணாநிதி தலைமையில் அனைத்து தேர்தல்களிலும் ஜெயித்தோம். ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறப்போவது இல்லை. அவரது தலைமையில் சந்தேகம் எழுகிறது. களப்பணி இல்லாமல் எந்த வெற்றியும் பெற முடியாது. வேனில் இருந்து ஓட்டு கேட்டால் போதாது. ஆர்.கே நகரில் டெபாசிட் போனதற்கு ஸ்டாலின் காரணம். எனக்கும் அவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சனைகள் வேறு, அரசியல் வேறு. போதிய மேற்பார்வை இல்லாமல் இருக்கும் நிலையில், தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களை பணத்திற்காக விலை போனதாக கூறுவதா?. ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடு சரியில்லை. வெற்றிப்பாதையில் செல்லவேண்டுமானால் தி.மு.க.வில் தலைமை மாறுதல் தேவை,...

ஆண்மையில்லாதவர்கள் என்றதற்கு பதிலடி குருமூர்த்தியை புறம்போக்கு என்கிறாரா அமைச்சர் ஜெயக்குமார்..?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆண்மையில்லாதவர்கள் என்றதற்கு பதிலடி குருமூர்த்தியை புறம்போக்கு என்கிறாரா அமைச்சர் ஜெயக்குமார்..? குருமூர்த்தி ட்வீட்டும் அதற்கு ஜெயக்குமார் பதிலடியும் தொடர்கதையாகி வருகிறது. இம்பொடன்ட் என்ற வார்த்தைக்கு குருமூர்த்தி விளக்கம் சொல்ல, அதற்கு பதிலடியாக புறம்போக்கு என்பதற்கு விளக்கம் சொல்லியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், புறம்போக்கு என்றால் ஆங்கில அகராதியில், Land exempt from assessment, either becauseit is set aside for communal purposes or because it is uncultivable என்று போட்டுள்ளது. தமிழில் சமுதாய நன்மை சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம் விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம் என்று போட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்ய முடியாத நிலங்களான, கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள...
பாஜக தலைகீழாக நின்றாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் வைக்கவே முடியாது – குஷ்பு சீண்டல்

பாஜக தலைகீழாக நின்றாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் வைக்கவே முடியாது – குஷ்பு சீண்டல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
சமூக வலைதளமான டுவிட்டரில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்துள்ளது. இவர்களின் காரசார கருத்து பதிவிற்கு பதில் கருத்து பதிவிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய தமிழிசை கூறிய கருத்தை வைத்து, சண்டையை துவக்கினார் குஷ்பு. குஷ்பு : மக்கள் அரசியலில் சேர்வது அவர்களின் கொள்கைள் மற்றும் விருப்பத்திற்காக மட்டுமே. நீங்கள் தான் உங்கள் கட்சியில் சேரும்படி கெஞ்சிக் கொண்டு இருக்கிறீர்கள். தமிழிசை : குஷ்பு அரசியலில் இணைந்தீர்களா? கட்சிகளுக்கு தாவினீர்களா? திமுக.,வில் இருந்து விலகி காங்.,கில் இணைந்தது மிகச் சிறந்த கொள்கையாலா என அனைவருக்கும் தெரியும். குஷ்பு : திமுக.,விலிருந்து விலகுவதற்கு 6 மாதத்திற்கு முன்பிருந்து இருகட்சிகளுடனும் எனக்கு நல்லுறவு இருந்தது. உங்கள் மூளையை சரிசெய்து க...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் துணிச்சலாக களம் கண்ட பாஜகவை குறைகூறுவதா? – தமிழிசை கண்டனம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் துணிச்சலாக களம் கண்ட பாஜகவை குறைகூறுவதா? – தமிழிசை கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகரில் துணிச்சலாக களம் கண்ட பாஜகவை மட்டும் குறை கூறுவது எந்த வகையில் நியாயம் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ஆர்.கே.நகரில் நாங்கள் வாங்கியிருக்கும் வாக்குகள் எங்கள் ஆட்சிக் கனவின் முற்றுப்புள்ளி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியிருக்கிறார். அவர் தீவிரமாக ஆதரித்து வரும் திமுக கூட்டணியின் வாக்கு, 33 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைந்திருக்கிறது. அப்படியெனில், திமுகவின் ஆட்சிக் கனவின் முற்றுப்புள்ளி என்று அதை எடுத்துக்கொள்ளலாமா?. ஆக, இந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் பணத்தின் குறியீடாக இருக்கலாமே தவிர பலத்தின் குறியீடு அல்ல. அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கூட்டணிக்கு வாக்குகளை பெற்றுத் தர முடியவில்லை என்பதை மறைத்து பாஜகவுக்கு...
ஒரு தொகுதியில் வென்றதன் மூலம் டிடிவி தினகரனை பெரிய அரசியல் தலைவராக தூக்கி வைத்துக் கொண்டாதீர்கள்- குஷ்பு காட்டம்

ஒரு தொகுதியில் வென்றதன் மூலம் டிடிவி தினகரனை பெரிய அரசியல் தலைவராக தூக்கி வைத்துக் கொண்டாதீர்கள்- குஷ்பு காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஒரு தொகுதியில் வென்றதன் மூலம் டிடிவி தினகரனை பெரிய அரசியல் தலைவராக தூக்கி வைத்துக் கொண்டாதீர்கள் அவர் ஜெயலலிதாவுக்கு மாற்று அல்ல, 2019 தேர்தலில் எத்தனை தொகுதியை வெல்கிறார் பார்ப்போம் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பேசியதாவது: “ஜெயலலிதாவை பல முறை பார்த்திருக்கிறேன். அவருக்கு எதிரான அரசியல் நடத்தி இருக்கிறேன். ஆனாலும் அவர் ஒரு எடுத்துக்காட்டான தலைவர். அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவர் அளவுக்கு தினகரன் வர முடியாது. அவர் சாதாரணமான நபர் தான். பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்ற வெற்றி அது. இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகிறார்கள், ஓபிஎஸ், ஈபிஎஸ்தான் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக துரோகம் செய்துள்ளார்கள் என்ற கோபம் மக்களுக்கு இருந்திருக்கும். ஜெயலலிதாவின் தொகுதி அது. ஜெயலலி...
 பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம்  நடிக்கும்  “ஸ்கெட்ச் “

 பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம்  நடிக்கும்  “ஸ்கெட்ச் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
 பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம்  நடிக்கும்  “ ஸ்கெட்ச் “                 கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும்  படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.  மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ்,மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம்  முழுவதும் வெளியாகிறது....