சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி !- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
கேரளாவிலுள்ள மேற்கு மலைத் தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலம் சபரிமலை. மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலை களுக்கிடையே ஒரு மலையின் உச்சி யில் 914 மீட்டர் உயரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரியப் பருவத்தில் இருக்கும் பெண்கள் இங்கு வருவதை தடை செய்யப்பட்டதாலும் மேலும் இதர பல காரணங்களாலும் பொதுவாக பெண்கள் இந்தக் கோயிலுக்கு வருகை புரிவதில்லை என்ற நிலையில் சபரிமலை கோயில் வழிப்பாட்டில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தர்விட்டு பெண்களை ...









