ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12
Shadow

Author: Kodanki

வைரலாகும் வாத்தி பட போஸ்டர்!

வைரலாகும் வாத்தி பட போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இ ப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷ் திரையுலகிற்கு அறிமுகமாகி 20ஆண்டுகளை கடந்துள்ளார். இதனை ரசிகர்களும் திரைத்துறையினரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் நீண்ட அறிக்கை ஒன்றை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தனுஷிற்கு வாழ்த்து தெரிவிக்கு...
ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்!

ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை ஆலியா பட் சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்று வந்தார். ஆர்.ஆர்.ஆர். படத்திலும் அவருக்கு சீதா வேடம் கொடுக்கப்பட்டதால் ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில்  ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்திருந்தார். அதில் சர்க்கரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். இதை எதிர்த்து ரசிகர்கள் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளனர்.  இந்த வீடியோவில் ஆலியாபட் நடித்த கலங்க் என்ற திரைப்படத்தின்  நிகழ்ச்சியில் ஆலியாபட்  நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை. அது ஆரோக்கியமற்றது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பகிர்ந்து வரும் ரசிகர்கள் பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்....
சந்தானத்தின் ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சந்தானத்தின் ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'குலு குலு'. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ' லொள்ளு சபா' மாறன், 'லொள்ளு சபா' சேசு, டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் கவனித்திருக்கிறார்...
முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர்!

முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இந்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்த சிறப்பு மலரையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த ஆகஸ்டு 2-ஆம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்....
இலங்கை முழுவதும் கியாஸ் வினியோகம் நிறுத்தம்  – பொருளாதார நெருக்கடி!

இலங்கை முழுவதும் கியாஸ் வினியோகம் நிறுத்தம் – பொருளாதார நெருக்கடி!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் சமையல் கியாசுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கியாஸ் நிரப்பும் மையங்களில் மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து கியாஸ் பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் சமையல் கியாஸ் கையிருப்பு தீர்ந்து விட்டதால், நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய கையிருப்பு வரும் வரை கியாஸ் வினியோகம் செய்ய முடியாது என இலங்கையின் முன்னணி கியாஸ் நிறுவனமான லிட்ரோ கியாஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்து உள்ளது. தற்போதைய நிலையில் தொழிற்சாலைகளுக்கான கியாஸ் மட்டுமே கையிருப்பு இருப்பதால், சமையல் கியாசுக்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவன தலைவர் விஜிதா ஹெராத் தெரிவித்து உள்ளார். அடுத்த கியாஸ் தொகுப்பு வருகிற வெள்ளி அல்லது சனிக்கிழமை தான் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்....
இலங்கை பிரதமர் ராஜபக்சே நேற்று பதவியை ராஜினாமா செய்து வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார் !

இலங்கை பிரதமர் ராஜபக்சே நேற்று பதவியை ராஜினாமா செய்து வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார் !

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மகிந்த ராஜபக்‌ஷே பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியது. பலத்த ராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இ...
மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு!

மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 5 ஆயிரத்து 45 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 135 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 106.86 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 106.94 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது....
மனைவியுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி குடிநீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்!

மனைவியுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி குடிநீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (வயது 29).இவரது மனைவி யுவராணி. இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். யுவராணி சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்,ஒரு மகன் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் யுவராணி கணவரை பிரிந்து குன்னத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மதன் யுவராணி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து யுவராணி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மதன் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார். போலீசார் இது தொடர்பாக மதனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இதுதொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் ...
தென்னிந்திய நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!

தென்னிந்திய நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பத்மஸ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி, மூத்த நடிகைகள் ராதிகா, பாரதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறும்போது, நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க இன்னும் ரூ.30 கோடி வேண்டும். அந்த நிதியை எப்படி திரட்டுவது என்று ஆலோசித்தோம். வங்கியில் கடன் பெற பொதுக்குழுவில் அனுமதி வாங்கி இருக்கிறோம். விரைவில் கட்டிடத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்போம். உள் அ...
‘தளபதி 66’ புதிய அப்டேட்!

‘தளபதி 66’ புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு  ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் ஐதராபாத் சென்ற விஜய் பிசியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் இப்படத்தின் இணைந்துள்ள நடிகர்கள் குறித்து படக்குழ...