சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

Author: Kodanki

கீழடியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு பட பாடல்..!

கீழடியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு பட பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீடு எங்கெல்லாம் நடந்துள்ளது, என திரைத்துறை செய்தியாளர்களை கேட்டால், நீண்ட பட்டியல் ஒன்றையே தருவார்கள். அதில் சில மேடைகள், நம் புருவத்தை உயர வைக்கும். அதைத் தாண்டி, - ஆச்சரியத்தில் முழ்க வைக்கும்... ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் முயற்சியில் பல புதிய களங்களை தனது திரைப்படத்துக்காக தேர்ந்தெடுத்துள்ளது அஹிம்சா புரொடக்ஷன்ஸ். ஆம்! தமிழ்.... தமிழர்... தாயகம்... போன்ற மண் சார்ந்த உணர்வுகள் முன்எப்போதும் இல்லாத உச்சத்துக்கு பயணிக்கும் நிலையில், இன்னொரு வரலாற்றுப் பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. சங்கம் வைத்து மொழி வளர்ந்த தமிழன், தனது கலையிலும், கலாச்சாரத்திலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, பல படிகள் முன்னேறியிருந்தான் என்பதை, இன்றைக்கு ஆதாரத்துடன் முன்வைக்கும்.... பண்பாட்டு பாசறையாக... வளர்ந்த நாகரீகத்தை காட்டும் நல்லதொரு சாட்சியாக விளங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி ...
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்சி’

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்சி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘கீ’, ‘கலகலப்பு-2’ படங்களை தொடர்ந்து ஜீவா தற்போது ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராஜு முருகன் இயக்கத்தில் அவர் அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ‘ஜிப்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜீவா நடிப்பில் ‘கலகலப்பு-2’ படம் வருகிற 9-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து காலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் ‘கீ’ படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஜீவா தற்போது, சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலிணி பாண்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜீவா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியது. இந்த படத்தை ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்க இருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயார...
குறும்பட இயக்குனரின் ஹாரர் படத்தில் நயன்தாரா..!

குறும்பட இயக்குனரின் ஹாரர் படத்தில் நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சமூக வலைத்தளங்களை கலக்கிய ‘லட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் சில மாதங்களுக்கு முன்பாக ‘லட்சுமி’ என்ற குறும்படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு பக்கம் ஆதரவும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் ‘லட்சுமி’ குறும்படத்திற்கு அமைந்தது. கலவையான விமர்சனத்தை எதிர்க்கொண்டாலும் மக்களிடையே அதிகமாக சென்றடைந்தது. இந்த குறும்படத்தை சர்ஜுன் என்பவர் இயக்கி இருந்தார். இவருடைய இயக்கத்தில் ‘மா’ என்ற குறும்படம் சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சர்ஜுன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் முழுக்...
ஷூட்டிங் கடைசி நாளில் பிரபுதேவாவை பரிசு கொடுத்து அசத்திய ‘லக்‌ஷ்மி’பட தயாரிப்பாளர்..!

ஷூட்டிங் கடைசி நாளில் பிரபுதேவாவை பரிசு கொடுத்து அசத்திய ‘லக்‌ஷ்மி’பட தயாரிப்பாளர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லக்‌ஷ்மி’ படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த பரிசால் நடிகர் பிரபு தேவா பிரமிப்பாகி இருக்கிறார். ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி லக்‌ஷ்மி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் திகைப்புடன் இருந்தார் பிரபுதேவா. பிரமோத் பிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி, ஷ்ருதி நல்லப்பா பிரபுதேவாவுக்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார்கள். வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக அமையும், அதோடு இந்த நெகிழ்வான நிகழ்வும் கூடுதலாக அமைந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி கூறும்போது, ‘உணர்வுகளும், பிரியாவிடையும் லக்‌ஷ்மியில் ரொம்பவே மிகுந்திருந்தது. பிரபுதேவா முழு படப்பிடிப்பிலும் எங்களுக்கு ரொம்பவே ஆதரவாக இருந்தார். அவர் மனதுக்கு மிகவும் நெ...
அஜித்துக்கு  ‘விஸ்வாசம்’ ஜோடியாக நயன்தாரா..!

அஜித்துக்கு ‘விஸ்வாசம்’ ஜோடியாக நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு வருகிற 22-ந்தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கும் சிவா, 4-வது முறையாக அஜித்துடன் இணைகிறார். இந்த படத்தில் இளமை தோற்றத்தில் அஜித் நடிக்கிறார், வடசென்னை தாதாவாக வருகிறார், என்று தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும், இது பற்றி இயக்குனர் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடி கீர்த்திசுரேஷ் என்று முதலில் கூறப்பட்டது. அடுத்து ஆத்மிகா, ஷரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அஜித்துடன் ‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கிறார் நயன்தாரா....
சொகுசு ஓட்டலாக மாறிய ஏர் இந்தியா விமானம்..!

சொகுசு ஓட்டலாக மாறிய ஏர் இந்தியா விமானம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள், வீடியோ
ஏர் இந்தியாவால் கைவிடப்பட்ட விமானம் ஒன்று முன்னாள் பணிப்பெண்ணின் கைவண்ணத்தால் இன்று கவனத்தை ஈர்க்கும் சொகுசு ஹோட்டலாக மாறியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பணிப்பெண்ணாக இருந்த ஸ்ருதி காகர் மற்றும் அவரது கணவர் ஷிடிஸ் இணைந்து இந்த உணவகத்தை உருவாக்கியுள்ளனர். ஏர்பஸ் வகை ஏர் இந்திய விமானமான A320 தினமும் 150 முதல் 200 பேர் வரை வருகை தரும் உணவகமாக மாறியுள்ளது. அரியானா மாநிலம் அம்பாலா நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த உணவகம் விமானத்தில் உள்ளது போன்றே போர்டிங் பாஸ் அம்சங்களை கொண்டது. விமான பணிப்பெண்களை போன்ற பணியாளர்கள், இந்திய, சீனா மற்றும் மெக்சிகன் உணவுகள் இங்கு வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. ரன்வே 1 என்ற பெயரில் இயங்கும் இந்த உணவகத்தில் ஓல்டு ரம் கொண்டு தயாரிக்கப்படும் சிக்கன் வகையின் சுவை நாவில் எச்சில் ஊறச்செய்யும் வர வைக்கும் வகையில் உள்ளது ...
13 ஆண்டாகியும் விடாது விரட்டும் ‘கற்பு’ வழக்கு கோர்ட்டில் ஆஜராக குஷ்புவுக்கு உத்தரவு..!

13 ஆண்டாகியும் விடாது விரட்டும் ‘கற்பு’ வழக்கு கோர்ட்டில் ஆஜராக குஷ்புவுக்கு உத்தரவு..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நடிகை குஷ்பு தமிழக பெண்களின் கற்பு குறித்து கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரை சேர்ந்த பா.ம.க. வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த முருகன் 2005-ம் ஆண்டு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் குஷ்பு நேரில் ஆஜராகி திரும்பும்போது ஒரு கும்பல் குஷ்பு கார் மீது அழுகிய முட்டை, தக்காளி போன்றவற்றை வீசியது. இதுகுறித்து மேட்டூர் தாசில்தார் அளித்த புகாரின்பேரில் மேட்டூர் போலீசார் பா.ம.கவை சேர்ந்த அறிவழகன் உள்பட 41 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ஜெகநாதன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை குஷ்பு, வழக்கு குறித்து விசாரணை செய்த அப்...
நடிகை கௌதமி தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம்..!

நடிகை கௌதமி தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
சென்னை பெசண்ட் நகரில் LIFE AGAIN FOUNDATION உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று WINNERS WALK என்ற பெயரில் நடிகை கௌதமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி்க்கு கௌதம் மேனன், பத்மபூஷன் ,பத்மவிபூஷன் Dr.ஷாந்தா, அன்பழகன், தயாரிப்பாளர் கலைப்புலி.S.தானு ,தேவையானி ஜெயம் மோகன்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.   இந்த நிகழ்ச்சியில் நடிகை கௌதமி பேசியதாவது "Dr.ஷாந்தா தமிழ்நாட்டை புற்றுநோய் இல்லாத மாநிலமாக மாற்ற நிறைய முயர்ச்சிகளை மேற்க்கொண்டார்.அவருக்கு மிகப்பெரிய நன்றி. LIFE AGAIN FOUNDATION இன்று நடத்திய WINNERS WALK  நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது.   இந்த நிகழ்ச்சி நோக்கம்,கேன்சரை குணப்படுத்தலாம் அதை வெல்லலாம் என்ற எண்ணம் எல்லார்க்கும் தெரிய வரவேண்டும் என்பதே ஆகும்.கேன்சர் என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் பயப்படுகிறார்கள்.அதை எதிர்...
சந்திர கிரகணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவானது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா?

சந்திர கிரகணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவானது வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் கடந்த 31-ஆம் தேதி அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதை காண அங்கு குவிந்த ஏராளமான மக்கள் சந்திர கிரகணத்தை கண்டுமகிழ்ந்தனர். பல மணி நேரம் நீடித்த இந்த அருமையான நிகழ்வை நாசா பிரத்யேக கேமரா மூலம் ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டது. அந்த வீடியோவில் சந்திரனை பூமி மறைக்கும் அற்புத காட்சிகள் நடந்த தருணத்தில் சந்திரனுக்கு இடது புறத்தில் ஒரு வெளிச்சமான மர்ம பொருள் யாரும் கணிக்க முடியாத வேகத்தில் கடக்கிறது. அந்த பொருள் என்னவென்று தெரியவில்லை. மனிதனால் தயாரிக்கப்பட்ட விண் பொருள் இவ்வளவு வேகத்தில் செல்ல வாய்ப்பே இல்லை என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே ...
சிவா மனசுல புஷ்பா இசைவிழாவில்  நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார் நடிகர் ரித்திஷ்..!

சிவா மனசுல புஷ்பா இசைவிழாவில் நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார் நடிகர் ரித்திஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் 100 நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி! சிவா மனசில புஷ்பா... விரைவில் வரவிருக்கும் அரசியல் பரபரப்பு படம் இது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் புதன் கிழமை சென்னையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் அத்தனை முன்னணி பிரபலங்களையும் பங்கேற்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் படத்தின் இயக்குநர் - ஹீரோ - தயாரிப்பாளர் வாராகி. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 100 நலிந்த கலைஞர்களுக்கு அந்த மேடையிலேயே கணிசமான நிதி உதவி வழங்குவதுதான். பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய பேனர் படங்களின் நிகழ்ச்சிகளில் கூட செய்யாத மிகப் பெரிய நிதி உதவி இது. தொகை எவ்வளவு என்பதை ஒரு சஸ்பென்சாக வைத்திருக்கிறார் வாராகி. நிதி உதவியுடன் அவர்கள் அனைவருக்கும் பிரமாதமான அசைவ விருந்து அளிக்கவும் தயாரிப்பாளர் வா...